கிறிஸ்மஸ் நாள்..
சர்ப்பம் தந்த பாவத்தை
கர்ப்பம் வந்து
தீர்த்த நாள்.
கர்ப்பம் வந்து
தீர்த்த நாள்.
மரத்தால் விளைந்த பாவத்தை
வரத்தால் களைந்த
மந்திர நாள்.
வரத்தால் களைந்த
மந்திர நாள்.
வார்த்தை ஒன்று
மனிதனாய் வடிவெடுத்த
நல்ல நாள்.
மனிதனாய் வடிவெடுத்த
நல்ல நாள்.
தொழுவம் ஒன்று
தொழுகை பெற்ற
திருநாள்.
தொழுகை பெற்ற
திருநாள்.
ஒதுக்கப்பட்டவை
வணக்கம் பெறும் என
வருகையால் சொன்ன நாள்.
வணக்கம் பெறும் என
வருகையால் சொன்ன நாள்.
ஆடிடைக் கூட்டில்
ஆதவன் உதித்த
அதிசய நாள்.
ஆதவன் உதித்த
அதிசய நாள்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.