Saturday, 21 July 2012

நறுமுகை


நறுமுகை


ஓர விழி பார்வையால் என் உயிரில்
தீயை மூட்டிவிட்டு
இதழ் பிரியா புன்னகையால் என்
இதய துடிப்பை கூட்டி விட்டு
நினைவில் வந்து நில்லாமல் போறவளே!!!!
நீ யார்? நினைவில் வந்த இறைவன் தந்த என் செல்வமே!
நீ வந்து போவதால் நெஞ்சம் ஒரு போர்க்களமாச்சு
நனைவுகளோ ஒரு புயலாச்சு
அடி என் வீடு கண்ணாடி என்னை
யாரோ போல் காட்டலாச்சு
அடி மாயப்பெண்ணே
நேரில் நீ வருவதெப்போது
காத்து இருக்கிறேன்
நான் கோடி கோடி ஆசைகளோடு
நட்புடன்
உன் இதய வானில் சிறகடிக்க விரும்பும்                                                                                
                                                                              ________________________________

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.