Sunday, 22 July 2012


வரதட்சணை


குழந்தையாக இருக்கும் போது பள்ளிக்கூடம்,
பெரியவர்களாக ஆனா பிறகு காலிக்குடம்.
வரதட்சணையாய் கேட்பது வெள்ளிக்குடம்,
தரமுடியாமல் தவிக்கும் எங்கள் குடும்பக்கூடம்.
படிப்பதற்கும் கொடுக்க வேண்டும் தட்சணை,
பதிக்கும் கொடுக்க வேண்டும் வரதட்சணை.
படிப்பை வைத்து கேட்கும் அளவு,
சலுகை செய்யும் உறவு.
விபச்சாரத்தை விட கொடிது வரதட்சணை,
பெண் ஜென்மத்தை ஆட்டி வைக்கும் பிரச்சினை.
மாட்டுச் சந்தையிலும் நடக்காத கொடுரம்,
மணப்பந்தலில் நடத்தப்படும் அவலம்.
பங்குச் சந்தையாய் ஆன கல்யாணம்,
பாசம் இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம்.
வரதட்சணைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
வரும் மகாலட்சுமியை வரவேற்போம்!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.