Saturday, 21 July 2012

இவர் யாரோ?


இவர் யாரோ?


இவர் யாரோ?
இவர் தச்சனின் மகனோ?
அவரது முதல் கூட்டம்
அலைமோதியது ஜனத்திரள்
எருசலேமின் எல்லைகளிலிருந்தும்
யோர்தானுக்கு அப்புறத்திலிருந்தும்
கலிலேயா கடற்கரையிலிருந்தும்
தெக்கப்போலி நகரத்திலிருந்தும்
திரண்டிருந்தது மக்கள் வெள்ளம்
தாகத்தோடிருந்தது மனித உள்ளம்
இவர் யாரோ?
இவர் போதகரோ?
செல்லும் பாதையெல்லாம் அற்புதங்களின் ஊற்று
நடக்கும் வழிநெடுக அதிசயங்களின் சான்று
காற்றும் கடலும் கட்டுப்படுகிறது
காலாற கடல் மேல் உலா வருகிறார்.
குருடன் பார்வையடைகிறான்
முடவன் குதித்தோடுகிறான்
வஸ்திரம் தொட்டவர் சொஸ்தமாகின்றனர்
விடுதலையாகின்றனர் சிறைப்பட்டவர்
இவர் யாரோ?
இவர் அதிகாரம் நிறைந்தவரோ?
கருனை உள்ளம் உருக்கத்தின் ஊற்றாகிறது
கண்கள் உறங்குவதில்லை, தூங்குவதில்லை
கல் முள்ளில் நடக்கப் பாதம் தயங்குவதில்லை
களைப்பில் அவரது உடல் மயங்குவதில்லை
இவர் யாரோ?
இவர் - இருக்கிறவராகவே இருக்கிறவர்
இவர் - இயேசு கிறிஸ்து
இவர் - இரட்சகர்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.