Sunday 29 July 2012

to me


தோழா உன் உயிர்த் தோழியடா நான்.......!! 

கணங்களில் கண்ணீர் இல்லை 
உன்னை எண்ணி எண்ணி 
வடித்தே அனைத்தும் வற்றிவிட்டன.... 

விட்டுச்சென்ற உன்னை எண்ணி 
உன்னுடன் சேர்ந்து 
நடைபோட்ட நாட்களின் 
அசை மீடலினால்.... 
வேதனையின்விளிம்பில்.... 

பறிக்கப்பட்ட என் இன்பங்கள் 
உன் காலடியில் மிதிக்கப்பட்டு..... 
புன்னகைகள் உன் வஞ்சனை 
கிடங்கினில் இடப்பட்டு..... 
வையகத்தின் புகழினை சூடிக்கொண்டன 
உன் 
பொய்யான வார்த்தைகள்..... 
புழுவாகத் துடிக்கும் 
என் பூமனத்தின் 
துன்பம் அறிவாய் 
எங்ஙனம்.....? 

வாழ்ந்துவிட துடிக்கவில்லை.... 
என் வாழ்க்கையில் உன் 
அத்தியாயம் இட்டுச்சென்ற 
கிழிஞ்ஞல்கள் 
இன்றும் என் 
வாழ்வை கேள்விக்குறி ஆக்கி நிற்பவை... 
இதற்காய் உன்னை 
பழி தீர்ப்பவள் நானல்ல... 
உன் 
விளையாட்டு தனத்தை ஒழித்து 
உன்னை திருத்திவிட துடிக்கும் 
உண்மைத் தோழியடா நான்.....! by jessie

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.