Sunday 29 July 2012


நண்பனே என்னை மன்னித்து விடு !!!! 


என் மேல் உனக்கு 
கோவம் இருந்தால் 
அதை என்னிடமே நீ 
காட்டி அதை தீர்த்து விடு 
மாறாக உன் மனதில் 
பூட்டி வைக்காதே .... 

நான் தவறு இழைப்பவள் தான்.. 

தவறு என் மேல் நீ கண்டால் 
என்னிடம் சொல்லி 
என்னை திருத்தி விடு ... 
மாறாக 
மௌனமாக இருந்து 
என்னை கொன்று விடாதே .... 

நான் உன் எண்ணம் போல் 
நடந்திருப்பேன் ... 
எனக்கு உன் மனதை 
படிக்கும் சக்தி மட்டும் இருந்திருந்தால் .... 

உன் மனதை படிக்கும் சக்தி 
எனக்கு இல்லாததால் 

என்னை மன்னித்து விடு நண்பனே !!!!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.