Sunday 29 July 2012

By jessie


விடை தா- காதலுக்கு. 

நிலவிற்கு 
காத்திருக்கும் முல்லையாய், 
கதிருக்கு 
காத்திருக்கும் ஆம்பலாய், 
உனக்காய் 
உன் கடைக்கண் 
பார்வைக்காய் - 
அது தரும் விடைக்காய் - 
உன் காதலுக்காய் - 
உன்னால் 
வரும் சம்மதத்தால், 
என்னில் எழும் 
கவிதைக்காய் - 
காத்திருக்கிறேன். 
விடை தா - 
ஒன்று என் 
காதலுக்கு - 
இல்லையென்றால் 
என் உயிருக்கு. to me

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.