Sunday 30 September 2012

தாயின் வலியும்... அன்பும்...

உட்காருவதைக் குறைத்தால் ஆயுளைக் கூட்டலாம்


ஒரு மனிதன் தினமும் 3 மணி நேரத்துக்குக் குறைவாக உட்கார்ந்திருந்தால், அவரது ஆயுட் காலம் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

ஓடியாடி வேலை செய்வது, நடப்பது, உடற்பயிற்சி செய்வது, சுமைகளை தூக
்குவது, போன்ற வேலைகளை செய்வதால் நமது தசைகள் நன்கு பலம் பெறுகின்றன. இதனால், ஆரோக்கியம் அதிகரிக்கிறது. ஆயுளும் கூடுகிறது.

ஆனால் பல மணி நேரம் உட்கார்ந்து கொண்டிருப்பதால், தசைகள் பலவீனமாகின்றன. இதனால் ஆரோக்கியம் குறைந்து ஆயுளும் குறைவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஓடியாடி பணி செய்யும் நபர்களை விட, உட்கார்ந்து கொண்டே பணியாற்றுபவர்களுக்கு ஆரோக்கியக் குறைவு அதிகமாக உள்ளது என்பதும், ஆயுள் குறைவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டே பணியாற்றும் நபர்கள், அவ்வப்போது எழுந்து நடந்து சென்று வந்து உட்காரலாம். இதுதான் ஆரோக்கியத்தைக் காக்கும் ஒரே வழியாகும். அல்லது வாரத்துக்கு ஒரு முறை வேகமாக நடப்பது, ஓடுவது போன்ற பயிற்சிகளை செய்து தசைகளை வலுவாக்கலாம்.

வீட்டில் இருப்பவர்கள் அதிக நேரம் அமர்ந்து கொண்டு டிவி பார்ப்பதை தவிர்த்துவிட்டு, தோட்டம் அமைப்பது, கை வேலை ஏதேனும் செய்வது, தூரத்தில் உள்ள கடைகளுக்கு நடந்து செல்வது போன்ற வேலைகளை செய்யலாம்.

முதுகுவலி ஒழிய


முதுகுவலி ஒழிய

நீண்ட நேரம் அமர்ந்திருத்தல்

நிற்பதைக் காட்டிலும் அமர்ந்திருக்கும்போது முதுகுத் தண்டுவடத்துக்கு 40 சதவிகித அழுத்தம் அதிகரிக்கிறது. நம்மில் பலர் மணிக்கணக்கில் இருக்கையில் அமர்ந்துகொண்டே இருக்கிறோம்; சரியான நிலையில் அமர்வதும் 
இல்லை. அவ்வப்போது எழுந்து நடப்பதையோ, சிறிய நேரம் ஓய்வு எடுப்பதையோ வேலைப் பளு காரணமாக மறந்துவிடுகிறோம். இப்படி உடல் செயல்படாமல் இருப்பதால், தசைகள் தளர்வுற்று முதுகு வலி வருகிறது. நாற்காலியில் அமரும் போது, உங்கள் பாதங்கள் தரையில் சரியாகப் படும்படி அமர வேண்டும். முதுகின் அனைத்துப் பகுதிகளும் நாற் காலியில் சாய்ந்து இருக்குமாறு நிமிர்ந்து அமர வேண்டும்; குறிப்பாக கீழ் முதுகு நன்றாகப் படும்படி அமர வேண்டும். என்னதான் அலுவலக வேலையாக இருந்தாலும்கூட அவ்வப்போது தண்ணீர் குடிக்க, சக ஊழியர்களிடம் கலந்துரையாட என்று நடப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

என்னவெல்லாம் இருக்கின்றன தாய்ப்பாலில்?


என்னவெல்லாம் இருக்கின்றன
தாய்ப்பாலில்?

அம்மாவின் மார்பகத்தில் குழந்தை வாய் வைக்கும்போது, தாயின் மூளையில் உள்ள ப்ரோலேக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் தூண்டப்பட்டு, ரத்தம் பாலாக மாற உதவி செய்கிறது. ஆக்சிடோசின் (Oxytocin) என்கிற மற்றொரு ஹா
ர்மோன் சுரந்து மார்பகத்தில் உள்ள குழாய்கள் (Lactiferous ducts) வழியாக தாய்ப்பால் வெளிவருகிறது. பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமையாக வேலை செய்யத் தொடங்காது. இந்த நேரத்தில் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி வேண்டும். எப்படி அதை ஏற்படுத்துவது? தாய்ப்பாலில் ‘இம்யூனோக்ளோபின் ஏ’ என்கிற பொருள் இந்த நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கச் செய்கிறது. தாய்ப்பாலில், புரதம், கார்போஹைட்ரேட், அத்யாவசியக் கொழுப்பு அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் இ, கே ஆகிய வைட்டமின்களும் நிறைந்து உள்ளன. மேலும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான டி.எச்.ஏ. (Docosahexaenoic acid) மற்றும் ஏ.ஆர்.ஏ. (Arachidonic Acid) ஆகியவையும் தாய்ப்பாலில் நிறைந்து உள்ளன. எனவே, தாய்ப்பாலுக்கு இணையான உணவு குழந்தைக்கு வேறு எதுவும் கிடையாது.

அம்மா அழகாயிடுவாங்க:


குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் அழகு கெட்டுவிடும் என்று பெண்கள் மத்தியில் தவறான கருத்து உள்ளது. குழந்தைப் பேறுக்குப் பின்பு சரியான வழிமுறைகளைப் பின்பற்றினால் உடல் கட்டமைப்பைச் சீராகப் பராமரிக்க முடியும். குழ
ந்தைப் பேறுக்குப் பின் பெண்கள் குண்டாவது உண்டு. தாய்ப்பால் கொடுக்கும் போது, உடல் பருமனானது படிப்படியாகக் குறைந்து பழைய நிலைமைக்கு வரும். தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்கும்போது ஆக்சிடோசின் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். இதனால் கருப்பை சுருங்கி, பிரசவத்துக்கு முன்பு உள்ள நிலையை அடையும். கருப்பைப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும்.

தாய்ப்பால் கொடுத்துவரும் தாய்மார்களுக்குக் குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் வரை மாதவிடாய் தள்ளிப்போகும். இது அடுத்த குழந்தைக்கான வாய்ப்பைத் தள்ளிப்போடவும் உதவுகிறது. ஆனால், இதற்கு மாறாக சிலருக்கு மாதவிடாய்ச் சுழற்சி ஏற்படவும் செய்யலாம். அது அவர்களது உடல் அமைப்பு, ஹார்மோன் மாற்றத்தைப் பொருத்தது. பிரசவக் காலத்தில், ஜெஸ்டேஸ்னல் டயபட்டிஸ் (Gestational Diabetes) பாதிப்பு இருந்தால் தாய்க்கு டைப்&2 சர்க்கரை வியாதி வரும். ஆனால், தாய்ப்பால் கொடுத்து வந்தால் இந்தச் சர்க்கரைப் பாதிப்பும் வருவதில்லை. மேலும், தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாயின் மன அழுத்தம் குறைந்து ஒருவிதமான திருப்தியை உணர முடியும்.

பிரசவம் முடிந்த 3 முதல் 10 மாதங்களுக்குள் உடலும் மார்பகங்களும் 60 சதவிகிதம் தன் நிலைக்கு வந்துவிடும். தாய்ப்பால் கொடுப்பது முழுமையாக நிறுத்தப்பட்டதும் மார்பகங்கள் முழுமையான தன்னிலைக்கு வந்துவிடும். இதற்கு கர்ப்ப காலத்தில் இருந்தே சரியான அளவில் பிரேஸியர் அணிவது உதவும். பிரேசியர் அணிவதால் சரியான அளவில் பால் சுரக்காது அல்லது பால் கட்டும் என்கிற மூட நம்பிக்கையும் பலரிடம் இருக்கிறது. இதில் உண்மை கிடையாது. பிரசவம் முடிந்ததும் தவறாமல் பிரேஸியர் அணிய வேண்டும்.

முதுகுவலி தவிர்க்க எடை அதிகமான பொருளை தூக்கும் முறை!


அதிமென்மையான படுக்கை, உயரமான தலையணை, ஒழுங்கற்ற முறையில் படுப்பது போன்றவை முதுகு வலியை வரவழைக்கும் காரணிகள். முதுகெலும்புத் தொடரை வளைப்பது போன்ற நிலையில் தூங்க வேண்டாம். சமதளத்தில் தூங்க
 பழக வேண்டும். எடை அதிகமான பொருட்களைத் தூக்கும்போது முதுகை வளைத்துத் தூக்கக் கூடாது. முதுகு நிமிர்ந்த நிலையிலேயே தரையில் குதிகால் இட்டு அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலேத் தூக்க வேண்டும். இப்படி செய்தால் முதுகுவலி வராமல் தடுக்க முடியும்.

டாக்டர் கார்த்திக்பாபு நடராஜன்,
வலி நீக்கவியல் மருத்துவர்

Pathirakiriyar

Pathirakiriyar was the king of one of the Northern states. When Pattinathar was traveling through Northern states, by mistake, he was caught as thief. King Pathirakiriyar, without investigating properly, had ordered to puni
sh Pathinathar in impaling stake. Pathinathar sung a song and impaling stake started to burn. Pathirakiriyar had attained enlightenment at that moment. Pathirakiriyar, leaving all his wealths, started to follow Pathinathar and became his disciple.


What is Rasamani?

Photo: What is Rasamani?

Mercury, a liquid metal, is one of the natural ore available from the Earth. It is made up of air and fluidity.

Generally we might have seen mercury in white colour. But they are available in red, yellow and pale blue colours. But these colour mercuries are rare varieties. According to Vaadha vaithiyam*, these rare mercuries are considered as one of the arsenic types. Since it consists of arsenic characteristics, Siththars also called it as “soodham”.

read more@
http://www.siththarkal.info/2012/05/what-is-rasamani.html

.
What is Rasamani?

Mercury, a liquid metal, is one of the natural ore available from the Earth. It is made up of air and fluidity.

Generally we might have seen mercury in white colour. But they are available in red, yellow and pale blue co
lours. But these colour mercuries are rare varieties. According to Vaadha vaithiyam*, these rare mercuries are considered as one of the arsenic types. Since it consists of arsenic characteristics, Siththars also called it as “soodham”.



ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி...

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி...

அறிந்த விளக்கம் :
யாரோ ஒரு புண்ணியவான்
போன போக்கில்
ஐந்தும் பெண்
பெற்றால்
அரசனும் ஆண்டி தான் என சொல்லிவிட,
நாளடைவில்
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என மாறி
பெண் பிள்ளைகள் அதிகம் உள்ள தந்தை மனதில்
புயல் அடிக்க செய்து விட்டனர்..


உண்மை அதுவல்ல..

அறியாத விளக்கம் :

ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விடயங்கள்..

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும்
செய்யக்கூடிய உடன்
பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்
என்பதாகும்..


இவர்களை கொண்டிருப்பவன்,
அரசனே ஆனாலும் கூட
அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் என்ற
அர்த்தத்திலேயே ஆண்டி என்ற பிரயோகம்
இங்கு பயன்படுகிறது...

நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

யார் இந்த கொலம்பஸ்?


இனவழிப்பு சாதனையாளன் கொலம்பஸை கௌரவிக்கும் அமெரிக்கர்.

அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 12 ம் தேதி, கொலம்பஸ் என்ற கொலை வெறியனை நினைவு கூர்ந்து விழா எடுக்கிறார்கள். "கொலம்பஸ் தினம்" ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஒரு முக்கியமான விடுமுறை தினம். கொலம்பஸ் அமெரிக்காவை "கண்டுபிடித்த" கதையை பாலர் பாடசாலையில் இருந்தே சொல்லிக் கொடுக்கிறார்கள். யார் இந்த கொலம்பஸ்? கரீபியன் தீவுகளில் வாழ்ந்த இரண்டு லட்சம் மக்களை இரு வருடங்களில் இனவழிப்பு செய்த சாதனையாளன். ஒன்பது வயது சிறுமிகளைக் கூட ப
ாலியல் அடிமைகளாக்கிய கயவன். அமெரிக்காவில் முதன் முதலாக அடிமை வாணிபத்தை அறிமுகம் செய்த அயோக்கியன். இன்று உயிரோடிருந்தால், மனித குலத்திற்கு எதிரான குற்றம் இழைத்ததாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருப்பான்.
அதற்கெல்லாம் ஆதாரம் உண்டா? கொலம்பஸ் தானே எழுதி வைத்த தினக்குறிப்புகள் இருக்கின்றன. கொலம்பஸின் ஆட்களில் ஒருவரான பார்த்தலோமே லாஸ் காஸாஸ், கொடுமைகளால் மனம்வருந்தி எழுதிய குறிப்புகள் இருக்கின்றன. அவற்றில் அமெரிக்க மக்களை இனவழிப்பு செய்த கொடூரங்கள் விலாவாரியாக எழுதப்பட்டுள்ளன. இன்று யாரும் இவற்றை நினைவு கூற விரும்புவதில்லை. வரலாற்றுப் பாடநூல்களும் சம்பிரதாயத்திற்காக என்றாலும் குறிப்பிடுவதில்லை. இனவழிப்பு செய்த கொலம்பஸை தேசிய நாயகனாக விழா எடுத்துக் கௌரவிக்கும் வெட்கக்கேடு அமெரிக்காவில் நடக்கின்றது. இதை அறியாத பல தமிழர்கள், அமெரிக்கர்கள் நாகரீமானவர்கள் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் கொலம்பஸ் தினம் கொண்டாடப் பட வேண்டுமென அரசுக்கு பிரேரணை செய்தது Knights of Columbus என்ற அமைப்பு. இது ஒரு வெளிநாட்டவருக்கெதிரான நிறவெறிக் கொள்கை கொண்ட கத்தோலிக்க அமைப்பு. அவர்கள் கொலம்பஸை தமது பிள்ளைகளுக்கு கத்தோலிக்க ஆதர்ச நாயகனாக காட்டினார்கள். 1934 ம் ஆண்டு, ஜனாதிபதி பிராங்கலின் ரூஸ்வெல்ட் கொலம்பஸ் தினம் என்ற விடுமுறை நாளை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். முதன் முதலாக அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல என்பது இன்று அனைவருக்கும் தெரிந்த உண்மை. செவ்விந்திய பூர்வீக குடிகள், பதினான்காயிரம் வருடங்களுக்கு முன்பே கண்டுபிடித்து விட்டார்கள். கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த முதல் ஐரோப்பியர் என்றும் கூற முடியாது. Leif Ericson என்ற கடலோடி தலைமையில், ஸ்கன்டிநேவியாவில் இருந்து வந்த வைகிங் மக்கள், கனடாவில் நியூபவுன்லாந்து மாகாணத்தில் குடியேறி வாழ்ந்தனர்.

12 அக்டோபர் 1492 ம் ஆண்டு, கொலம்பஸ் பஹாமாஸ் தீவுகளில் காலடி எடுத்து வைத்த காலத்தில், அங்கே அரவாக்ஸ் இன மக்கள் வாழ்ந்து வந்தார்கள். சமாதான விரும்பிகளான அந்த மக்களைப் பற்றி கொலம்பஸ் தினக்குறிப்பில் இவ்வாறு எழுதி வைத்தார்.
"அவர்கள் தம்மிடம் இருப்பதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறார்கள். கேட்பதற்கெல்லாம் இல்லை என்று மறுப்புக் கூறுவதில்லை....."
"அரவாக்ஸ் மக்களிடம் எந்த ஆயுதமும் இல்லை. அவர்களது சமூகத்தில் குற்றவாளிகள் இல்லை, கைதிகள் இல்லை, சிறைகள் இல்லை. எமது கப்பலான சாந்தா மரியா கரைதட்டி உடைந்த பொழுது, கப்பலில் வந்தோரையும், பொருட்களையும் மீட்க அரவாக்ஸ் மக்கள் உதவி செய்தனர். கப்பலில் இருந்த ஒரு பொருளையேனும் அவர்கள் ஒளித்து வைக்கவில்லை..."

இவ்வாறு மனமுவந்து உதவி செய்த நேர்மையான அரவாக்ஸ் மக்களுக்கு கொலம்பஸ் செய்த கைம்மாறு என்ன? அந்த மக்களை அடிமைகளாக்கி தங்கச் சுரங்கங்களில் கட்டாய வேலை வாங்கினான். இருப்பதை பங்கிட்டு மகிழச்சியாக வாழ்ந்த மக்கள், இன்னலுற்று மனமொடிந்து தற்கொலை செய்து கொண்டார்கள். ஒரு கட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கூட்டாக தற்கொலை செய்தனர். அரவாக்ஸ் பெண்களை கொலம்பஸின் ஆட்கள் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தார்கள். அதைப் பற்றி கொலம்பஸ் இவ்வாறு எழுதியுள்ளார்: "இளம் பெண்களுக்கான கேள்வி அதிகரித்த காரணத்தால், அவர்கள் 9 , 10 வயது சிறுமிகளை தேடிச் சென்றார்கள்..."

அரவாக்ஸ் அடிமைகளை இறக்கும் வரை இரத்தத்தை பிழிந்து வேலை வாங்கினார்கள். ஒரு செவ்விந்திய அடிமை தினசரி குறிப்பிட்ட கோட்டா தங்கம் எடுத்துக் கொடுக்கா விட்டால், தண்டனையாக இரு கைகளையும் வெட்டினார்கள். அடிமை முறைக்கு எதிர்ப்புக் காட்டிய அரவாக்ஸ் தொழிலாளியின் மூக்கையும், காதுகளையும் அறுத்தனர். அடிமை விலங்கை உடைத்துக் கொண்டு தப்பியோடி பிடிபட்டால் உயிரோடு கொளுத்தினார்கள். கொலம்பஸ் தனது இரண்டாவது பயணத்தில் வேட்டை நாய்களை கொண்டு வந்தான். தப்பியோடும் அடிமைகள் மீது நாய்களை அவிழ்த்து விடுவார்கள். தப்பியோடியவர்களை வேட்டையாடும் நாய்கள், அவர்களை கடித்துக் குதறி, கை வேறு, கால் வேறாக பிய்த்து விடும். கொலம்பஸின் ஆட்கள் தமது வேட்டை நாய்களுக்கு மாமிச உணவு தீர்ந்து விட்டால், அரவாக்ஸ் இனக் குழந்தைகளை வெட்டி உணவளித்தார்கள்! ஸ்பெயினில் இருந்து நீண்ட கடற்பயணம் செய்து வந்தவர்களை விருந்தாளிகளாக ஏற்று உபசரித்த அரவாக்ஸ் மக்களுக்கு, கொலம்பஸ் செய்த நன்றிக்கடன் அப்படியானது. தான் செய்த கொடூரங்களுக்காக கொலம்பஸ் வருந்தியதாக தெரியவில்லை. கிறிஸ்தவர்களை அடிமைகளாக வைத்திருக்க கத்தோலிக்க சட்டம் அனுமதிக்கவில்லை. அதற்காக கொலம்பஸ் ஒரு தந்திரம் செய்தான். செவ்விந்திய குடிமக்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கு தடை விதித்தான். கிறிஸ்தவர்கள் அல்லாதோரை கொன்றாலும் பாவம் இல்லை அல்லவா?

ஜெர்மனியில் ஹிட்லரை தேசிய நாயகனாக கொண்டாடினால் உலகம் எந்தளவு அதிர்ச்சி அடையும்? மனித நேயம் மிக்கவர்களாக உலகிற்கு காட்டிக் கொள்ளும் அமெரிக்கர்கள், கொலைவெறியன் கொலம்பஸை தேசிய நாயகனாக கொண்டாடுவதைக் கண்டு யாரும் அதிர்ச்சி அடையவில்லை. ஏன்? உலக வரலாறு முழுவதும் இனப்படுகொலையாளர்கள் மாவீரர்களாக போற்றப் பட்டு வந்திருக்கிறார்கள். ஜூலியஸ் சீசர், அலெக்சாண்டர், நெப்போலியன்.... உதாரணத்திற்கு சில. இதையெல்லாம் தெரிந்தாலும் மூடி மறைக்கும் அறிவுஜீவிகள் தான்; ஸ்டாலின், மாவோ எத்தனை பேரை கொலை செய்தார்கள் என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். "மேலைத்தேய நலன்களுக்காக கொலை செய்பவர்கள் பரிசுத்தவான்கள். அதனால் அவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கலாம்."

ஹிட்லரும் திருக்குறளைப் படித்திருக்கிறார் -

ஹிட்லரும் திருக்குறளைப் படித்திருக்கிறார் - 

எண்ணி துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
Photo: ஹிட்லரும் திருக்குறளைப் படித்திருக்கிறார் - 

எண்ணி துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

நாவல் பழம் (நவ்வா பழம் )..!


நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மே
லும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

முதுகுவலி ஏன் வருகிறது? எப்படி போக்குவது !!!


முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர் களையும் இப்போது பாடாய்படுத்திக்கொண்டிருக்கிறது. பெண்களும் முதுகுவலி, கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதுகின் கட
்டமைப்பு எப்படி இருக்கிறது?

முதுகில் வலி உருவாக என்ன காரணம்?

வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப்படுத்துவது எப்படி? என்பதை விளக்கும் கேள்வி- பதில் பகுதி இது!

* தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப்படியாக வளரும்? முதுகெலும்பின் டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன?

“முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம், இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும்.

முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்), 12 எலும்புகள் மார்பு பகுதியிலும் (தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (லம்பார்), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக் கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது.

இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது.”

* எத்தனை வயது வரை முதுகெலும்பு வளரும்? வேகமாக வளரும் காலகட்டம் எது?

“குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும் இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25 வயது வரை மிதமாகவும் இருக்கும்.”

* முதுகெலும்பின் அமைப்பில் ஆண்-பெண்ணுக்கு வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா?

“முதுகெலும்பின் அமைப்பிலோ, செயல்பாட்டிலோ ஆணுக்கும்- பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் முதுகெலும்பின் வளைவுகளில் சிறு வித்தியாசம் இருக்கும். வளைவு ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்.”

* பெண்கள் கோலம் போடுதல், வீடு பெருக்குதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு முதுகு வலி ஏற்படுமா?

“பெண்கள் 45-50 வயது வரை வீட்டு வேலைகளை செய்வது நல்லது. வீட்டு வேலைகளால் முதுகெலும்பிற்கோ, எலும்புகளின் நடுவில் உள்ள டிஸ்கிற்கோ எந்த பாதிப்பும் வராது. ஆனால் முதுகெலும்பில் ஏதாவது பிரச்சினையோ, நோயோ ஏற்பட்டிருந்தால் கடினமான வேலைகளை செய்யாமல் இருக்கவேண்டும். இடுப்பில் தண்ணீர் குடத்தை தூக்குவதாலும், குழந்தைகளை இடுப்பில் தூக்குவதாலும் பெண்களின் முதுகெலும்பில் பொதுவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.”

* கர்ப்பம், பிரசவத்திற்கு தக்கபடி பெண்களின் முதுகெலும்பு கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா?

“பெண்களின் அடி முதுகு வளைவு அவர்களது கர்ப்ப காலத்தில் வயிற்றின் முன் பக்க வளர்ச்சிக்கு ஏற்ப, பின்பக்கம் சாய்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இதனால் வயிற்றில் குழந்தை வளர வளர முன்பக்க பாரத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில், பின்புறமாக சாய்ந்துகொண்டு கர்ப்பிணிகளால் அன்றாட வேலைகளை செய்ய முடியும். இதற்கு கர்ப்ப காலத்தில் சுரக்கும் ஹார்மோன்களும் உதவி புரிகின்றன.”

* முதுகுவலி தோன்ற எத்தனை விதமான காரணங்கள் இருக்கின்றன?

“முதுகுவலி தோன்ற கீழ்க்கண்டவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.

டிஸ்க் ப்ரொலாப்ஸ்: முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல் இயங்கும் `டிஸ்க்’ என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ, காயம் பட்டதினாலோ அல்லது அழற்சியினாலோ தேய்ந்து விடும். அப்போது 2 எலும்புகளுக்கிடையே போதிய இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன் அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி வலியை உண்டு பண்ணும்.

ஸ்பாண்டிலோசிஸ்: வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும், எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளுக்கிடையே உராய்வு ஏற்படும். இதனால் அழற்சியோ, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும்.

ஆஸ்டியோபொரோஸிஸ்: உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம். இதனால் எலும்புகளில் போதிய அளவு சுண்ணாம்பு சத்து இல்லாததால் எலும்புகள் வலுவிழந்து, அடர்த்தி குறைவாகிவிடும். இதனாலும் எலும்புகளில் வலியும், எலும்பு முறிவும் ஏற்படலாம்.

ஸ்பான்டிலோலிஸ்தஸிஸ்: முதுகெலும்பு வலுவிழக்கும்போது வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து முன்புறமோ பின்புறமோ விலகி விடும். இதனாலும் முதுகுவலியோ, முதுகு தசை பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.

ஆர்த்ரைட்டிஸ்: மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே ஆர்த்ரைட்டிஸ். இது ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஆன்க்கிலோசில் ஸ்பான்டிலோசிஸ் போன்ற நோய்களின் விளைவால் ஏற்படக்கூடியதாக இருக்கும்.”

* மேடு, பள்ளம் நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன பயணம் மேற்கொள்வது முதுகுவலியை ஏற்படுத்துமா?

“முதுகெலும்புகளுக்கு நடுவில் உள்ள டிஸ்க் ஷாக் அப்சர்வர் போல் செயல்பட்டு அதிக பளு தூக்குதல், குனிதல், குதித்தல் போன்ற சமயங்களில் அதிர்வுகளை தாங்கி கொள்ளும். ஆனால் டிஸ்க் தேய்ந்து விட்டாலோ அல்லது எலும்புகளில் வேறு பிரச்சினை இருந்தாலோ மேடு, பள்ளம் நிறைந்த சாலையில் செல்லும்போது டிஸ்க் அழுத்தப்பட்டு, அழுத்தம் தாளாமல் வெளியே பிதுங்கி பக்கத்தில் உள்ள நரம்புகளை அழுத்தும். இதனால் வலி ஏற்படும்.”

* முதுகுவலி என்பது கழுத்து வலியும் சேர்ந்ததா? முதுகு வலிக்கும்போது கழுத்தும் சேர்ந்து வலிக்குமா?

“முதுகெலும்பில் எங்கு வேண்டுமானாலும் எலும்பு தேய்மானமோ, அழற்சியோ, டிஸ்க் ப்ரொலாப்ஸோ ஏற்படலாம். இதனால் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். பொதுவாக கழுத்து எலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்றால் கழுத்து, தோள்பட்டை, கைகளில் வலி பரவலாம். அதே போல் அடி முதுகில் ப்ரொலாப்ஸ் என்றால் அடிமுதுகு, இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். இரண்டு வித வலியும் சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.”

* முதுகெலும்பின் அடர்த்தி குறைவு மற்றும் பிரச்சினைகளை வலி வரும் முன்பே கண்டுபிடிக்க முடியுமா?

“வலியின் அறிகுறி தெரியும் வரை முதுகெலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் பிரச்சினையை கண்டுபிடிக்க முடியாது.”

* கழுத்து வலி மற்றும் முதுகுவலிக்கு இருக்கும் நவீன சிகிச்சை என்ன?

“பேக் அண்ட் நெக் கட்டமைப்பு மருத்துவத்தில், டிஸ்க் ப்ரொலாப்ஸை அறுவை சிகிச்சையின்றி கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட DRX 9000 என்ற கருவி முதுகுவலிக்கும், DRX 9000C என்ற கருவி கழுத்து வலிக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறை கிட்டத்தட்ட 86 சதவீதம் வரை வலியை குறைத்து நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும்.”

* உறுப்பு மாற்று ஆபரேஷன் இப்போது பரவலாக இருக்கிறதே. முதுகெலும்புகளை எடுத்து எலும்பு வங்கிகளில் சேகரிக்க முடியுமா? அதை மாற்று ஆபரேஷன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்த முடியுமா?

“எலும்பு வங்கியில் எலும்புகள் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் முதுகெலும்புகள் சேமிக்கப்படுவதில்லை. மேலும் செயற்கை டிஸ்க்குகளை பயன்படுத்தி டிஸ்க் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை இதுவரை செய்யப்படவில்லை. அதேபோல் தண்டுவட பாதையோ, தண்டு வடமோ வேறொருவரிடம் இருந்து மாற்றாக எடுத்து வைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் கிடையாது. இனி எதிர்காலத்தில் இதற்கான புது சிகிச்சை முறைகள் வரலாம்.

Constanzo Beschialso (Tamil: வீரமாமுனிவர்)


Constanzo Beschi, also known under his Tamil name of Vīramāmunivar (Tamil: வீரமாமுனிவர்) or Constantine Joseph Beschi (in English) (8 November 1680 – 4 February 1747) was an Italian Jesuit priest, 
Missionary in South India, and renowned poet in the Tamil language. Even though he was primarily a missionary, he is also known, in a broader circle, as one of the classical writers of Tamil literature. Besides composing a literary Tamil grammar, he also wrote a grammar for the common use of Tamil – the first to do so – which earned him the title of Father of Tamil prose. He compiled several Tamil dictionaries: including the Chaturakarati (சதுரகராதி), the quadruple lexicon containing words, synonyms, categories of words, and rhymes; a Tamil-Latin and Latin-Tamil-Portuguese dictionary.

His greatest poetical work is the Thembavani (தேம்பாவணி) (the Unfading Garland), an extraordinary epic poem – 3615 stanzas long – on Salvation history and the life of Saint Joseph. It is considered a classic of Tamil literature. He also wrote a prabandham (one of the minor literature) called Kavalur Kalambagam (காவலூர் கலம்பகம்), a grammatical treatise called Thonnool (தொன்னூல்), a guide book for catechists with the title Vedhiyar Ozukkam (வேதியர் ஒழுக்கம்), and Paramarthaguruvin kathai (பரமார்த்த குருவின் கதை), a satirical piece on a naive religious teacher and his equally obtuse disciples. In prose he left us polemical writings against the Lutheran missionaries and didactic religious books for the instruction of Catholics. He prepared a vademecum for newly arrived missionaries.

ஒளவையின் வரலாறு


ஒளவையின் வரலாறு, காலம் ஆகியவை இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. ஒளவையின் பெயரால் பல பாடல்களும், சில நூல்களும், சில கதைகளும் நிலவிவருகின்றன. அவற்றை வைத்துப்பார்க்கும்போது சுமார் ஆயிரத்தைன்னூறு ஆண்டுக் கால கட்டத்திற்குள் குறைந்தது மூன்று ஒள
வையார்களாவது இருந்ததாகத் தோன்றும். அனைத்துக் கதைகளும் இணைக்கப்பட்டு, கதம்பமாக ஒரு வரலாறு பின்னப்பட்டு, அதுவே ஒளவையாரின் வாழ்க்கைச் சரிதமாக, செவிவழி மரபாகக் கூறப்பட்டு வருகிறது.

அவர் ஆதி பகவன் ஆகிய இருவருக்குப்பிறந்து, பிறந்தவுடனேயே பெற்றோராலால் கைவிடப்பட்டு, பாணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டதாக அவ்வரலாறு கூறும். அவர் கன்னிப்பருவத்திலேயே முதுமையையும் துறவறத்தையும் விநாயகபெருமானின் பேரருளால் பெற்றதாகவும் அது கூறும். அதிகமானிடம் நெருங்கிய நட்பு பூண்டு, அவரால் ஆதரிக்கப்பட்டு, அவரிடமிருந்து கருநெல்லிக்கனி ஒன்றைப்பெற்று, உண்டு, அதன்மூலம் அழியாத உடலையும் நீண்ட ஆயுளையும் பெற்றார்; அதிகனுக்காக தொண்டைமானிடம் தூது சென்றார்.

சோழ மன்னர்களின் பட்டியல்


சோழ மன்னர்களின் பட்டியல்
முற்காலச் சோழர்கள்
செம்பியன் எல்லாளன்
இளஞ்சேட்சென்னி கரிகால் சோழன்
நெடுங்கிள்ளி நலங்கிள்ளி
கிள்ளிவளவன் கோப்பெருஞ்சோழன்
கோச்செங்கணான் பெருநற்கிள்ளி
மாற்றார் இடையாட்சி கி.பி. 200-848
இடைக்காலச் சோழர்கள்
விசயாலய சோழன் கி.பி. 848-871(?)
ஆதித்த சோழன் 871-907 CE
பராந்தக சோழன் I கி.பி. 907-950
கண்டராதித்தர் கி.பி. 949/50-957
அரிஞ்சய சோழன் கி.பி. 956-957
சுந்தர சோழன் கி.பி. 956-973
ஆதித்த கரிகாலன் கி.பி. 957-969
உத்தம சோழன் கி.பி. 970-985
இராசராச சோழன் I கி.பி. 985-1014
இராசேந்திர சோழன் கி.பி. 1012-1044
இராசாதிராச சோழன் கி.பி. 1018-1054
இராசேந்திர சோழன் II கி.பி. 1051-1063
வீரராஜேந்திர சோழன் கி.பி. 1063-1070
அதிராஜேந்திர சோழன் கி.பி. 1067-1070
சாளுக்கிய சோழர்கள்
குலோத்துங்க சோழன் I கி.பி. 1070-1120
விக்கிரம சோழன் கி.பி. 1118-1135
குலோத்துங்க சோழன் II கி.பி. 1133-1150
இராசராச சோழன் II கி.பி. 1146-1163
இராசாதிராச சோழன் II கி.பி. 1163-1178
குலோத்துங்க சோழன் III கி.பி. 1178-1218
இராசராச சோழன் III கி.பி. 1216-1256
இராசேந்திர சோழன் III கி.பி. 1246-1279
சோழர் சமூகம்
சோழ அரசாங்கம் சோழ இராணுவம்
சோழர் கலை சோழர்கால இலக்கியம்
பூம்புகார் உறையூர்
கங்கைகொண்ட சோழபுரம் தஞ்சாவூர்
தெலுங்குச் சோழர்கள்

Relationships in Tamil

Amma – Mother

Appa – Father

Annan – Elder Brother

Akka – Elder Sister

Thambi – Younger Brother

Thangai – Younger Sister

Thaththa – Grand father

Paatti – Grand Mother

Maamanaar – Father in law

Maamiyar – Mother in law

Anni – Elder brother's wife

Machaan –Sister's husband

Machinan – Wife's brother

Naathanar – Husband's Sister

Machandaar - Husband's elder brother

Kolunthanar – Husband's younger brother

Mama – Mother's Brother

Aththai – Father's Sister

Periyappa – Father's elder brother

Chiththappa – Father's younger brother

Periyamma – Mother's elder sister

Chinnamma – Mother's younger brother

தொல்காப்பியம்

Photo: தாய்த்தமிழ்மொழி வாழத் தாம் வாழ்வோர்

தொல்காப்பியம் 

- தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். 
- இது இலக்கிய வடிவிலிருக்கும், இலக்கண நூல் ஆகும். 
- இதை எழுதியவர் தொல்காப்பியர் எனப்படுகின்றார். 

- மிகப் பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும்.

அமைப்பு

தொல்காப்பியம் 1602 பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
எழுத்ததிகாரம்

           1. நூன் மரபு
           2. மொழி மரபு
           3. பிறப்பியல்
           4. புணரியல்
           5. தொகை மரபு
           6. உருபியல்
           7. உயிர் மயங்கியல்
           8. புள்ளி மயங்கியல்
           9. குற்றியலுகரப் புணரியல்

சொல்லதிகாரம்

           1. கிளவியாக்கம்
           2. வேற்றுமை இயல்
           3. வேற்றுமை மயங்கியல்
           4. விளி மரபு
           5. பெயரியல்
           6. வினை இயல்
           7. இடை இயல்
           8. உரி இயல்
           9. எச்சவியல்

பொருளதிகாரம்

           1. அகத்திணையியல்
           2. புறத்திணையியல்
           3. களவியல்
           4. கற்பியல்
           5. பொருளியல்
           6. மெய்ப்பாட்டியல்
           7. உவமவியல்
           8. செய்யுளியல்
           9. மரபியல்

தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள்

ஆறு பண்டை உரையாசிரியர்கள்


           1. இளம்பூரணர்
           2. பேராசிரியர்
           3. சேனாவரையர்
           4. நச்சினார்க்கினியர்
           5. தெய்வச்சிலையார்
           6. கல்லாடர்
தொல்காப்பியம் 

- தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். 
- இது இலக்கிய வடிவிலிருக்கும், இலக்கண நூல் ஆகும். 
- இதை எழுதியவர் தொல்காப்பியர் எனப்படுகின்றார்.

- மிகப் பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும்.

அமைப்பு

தொல்காப்பியம் 1602 பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
எழுத்ததிகாரம்

1. நூன் மரபு
2. மொழி மரபு
3. பிறப்பியல்
4. புணரியல்
5. தொகை மரபு
6. உருபியல்
7. உயிர் மயங்கியல்
8. புள்ளி மயங்கியல்
9. குற்றியலுகரப் புணரியல்

சொல்லதிகாரம்

1. கிளவியாக்கம்
2. வேற்றுமை இயல்
3. வேற்றுமை மயங்கியல்
4. விளி மரபு
5. பெயரியல்
6. வினை இயல்
7. இடை இயல்
8. உரி இயல்
9. எச்சவியல்

பொருளதிகாரம்

1. அகத்திணையியல்
2. புறத்திணையியல்
3. களவியல்
4. கற்பியல்
5. பொருளியல்
6. மெய்ப்பாட்டியல்
7. உவமவியல்
8. செய்யுளியல்
9. மரபியல்

தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள்

ஆறு பண்டை உரையாசிரியர்கள்


1. இளம்பூரணர்
2. பேராசிரியர்
3. சேனாவரையர்
4. நச்சினார்க்கினியர்
5. தெய்வச்சிலையார்
6. கல்லாடர்

Be Proud to be Tamizhan !

Tamil is Top Always-செம்மொழியாம் தமிழ் மொழி வாழ்க ! வளர்க 

This article gives you the information about the Tamil Pride.Tamil Language has more number of letters than any language.
Tamil language is one of the ancient Language of this latters.So, it fits for status of "Semmozhi".The another interesting thing about Tamil is it Leads in the number of letters it contains also.
Tamizh-247
Italy-20

Greek-24
Germany-26
Latin-22
French-26
spanium-27
Arabi-28
Thurukki-28
Parasigam-31
Sanskrit-48
chinese-214
English-26
Be Proud to be Tamizhan !

tamil baby names Name Meaning

• Sandana Fragrance

• SandanaChelvi Fragrance

• Sandanammal Fragrance

• SandanaValli Fragrance

• Sarala Fluent

• Selvakumari Prosperous Girl

• SelvaMalar Prosperous + Flower

• SelvaMangai Prosperous Girl

• SelvaNayagi Prosperous Girl

• Selvarasi Prosperous Girl

• Sembaruthi Name of a Beautiful Flower; Hibiscus

• Senbagam Name of a Beautiful Flower

• Sendalir

• Sendhen Sweet as Pure Honey

• SendhilVadivu

• Sengamalam Red Lotus Flower

• Sentamarai Red Lotus Flower

• Sentamil Pure Tamil

• SenTamilChelvi Pure Tamil Girl

• SenTamilMani Tamil Gem

• Sevandhi Chrysanthemum

• Silambarasi

• Silambu Name of an Ornament

• SilambuChelvi

• Sivakani

• Solaiammal Garden Girl

• Sollalagi Beautiful and Articulate

• Soodamani Pristine Gem

• Subbammal

• Sudar Brilliant

• SudarKodi Brilliant

• SudarMadhi Brilliant

• SudarMani Brilliant

• SudarOli Brilliant

• Surabi

தமிழர் பாரம்பரிய உடை

Photo: தமிழர் பாரம்பரிய உடை
உலகத்தமிழர் பேரமைப்பின் தமிழர் தேசிய உடைக்கான பரிந்துரை 
ஆண்களுக்கு:
ஒரு 1 செ.மீ அகலலமுள்ள கரையுடன் கூடிய வெள்ளைநிற வேட்டியும், சந்தன நிறத்தில் சிறிய கழுத்துப்பட்டியோடு கூடிய திறந்த ழுக்கைச் சட்டை மற்றும் விசிறி மடிப்பு அல்லது நெடுங்கரையுடன் கூடிய துண்டு (1 செ.மீ. அகலமுள்ள இருகோடுகள் இருக்கலாம்)

பெண்களுக்கு:
7 செ.மீக்கு மேற்படாத அகலமுள்ள அரக்குக் கரைபோட்ட சந்தன நிறச் சேலையும் மற்றும் அரக்குநிற இரவிக்கையும்.

தமிழர் உடை வரலாறு:

"பண்டைய கோவில் சிற்பங்கள் ஓவியங்கள் வெறும் கற்பனையல்ல. அவை மேலாடை அணியும் நாகரிகம் வந்த பின்னரே முன்னைய நிலை இன்று ஆபாசமாகத் தோன்றுகின்றது. உயர்குடிப் பெண்கள் கச்சைக்கு மேலாகச் சட்டை அணிவதும் சில நூற்றண்டுகளின் முன் தோன்றிய வழக்கமே. மற்றைய பெண்களில் ஒரு பகுதியினர் மேல் சட்டையின்றி தாவணிச் சேலையால் மார்பை மறைப்பதும், தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் மார்பை மூடத்தக்கதாக நெஞ்சோடு மட்டும் சேலை கட்டுவதும் வழக்கமாக தொடர்ந்தது. இப்போக்கை இன்றும் கிராமங்களில் காணலாம்."

"இளம் பெண்களின் உடைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சேலை கட்டுவது மறைந்து சுரிதார் முதன்மை பெற்றுள்ளது. நகரங்களில் கல்லூரிக்குச் செல்லும் பெண்களில் சேலை கட்டிச் செல்பவர் அநாகரிகமானவராகினர். சேலை சிறைக்கைதிகள் போன்ற உடை, பஸ்களுக்கு ஓட முடியாது. ஸ்கூட்டர், சைக்கிள் ஓட்டுவதற்கும் ஒத்துவராது என்பதை அனுபவத்தில் கண்டனர். விலை மலிவானது; ஏற்றத்தாழ்வு காட்டாதது; விரைவாக நடக்க உதவுவது; இளமையாகக் காட்டுவது. இடையைக் காட்டி தேவையற்ற கவர்ச்சியை ஏற்படுத்த வேண்டியதில்லை எனப் பல காரணங்களே தென்நாட்டுச் சேலை பின்னடைய, வடநாட்டு சுரிதார் உடை நவீனமாக்கியது."

"ஆண்கள் அணியும் சட்டையும் அரைக்கால் அல்லது முழுக்கால் சட்டையும் 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தமிழ்நாட்டில் பெருவாரியான மக்களால் அறியப்படாதவையாகும். ஆங்கிலேயரும் நவாவுப் படையினர் எனப்படும் வடநாட்டு முசுலிம்களும் வந்த பின்னரே உடம்பின் மேற்பகுதியில் 'தைத்த சட்டை' அணியும் வழக்கம் புகுந்தது.
உலகத்தமிழர் பேரமைப்பின் தமிழர் தேசிய உடைக்கான பரிந்துரை 
ஆண்களுக்கு:
ஒரு 1 செ.மீ அகலலமுள்ள கரையுடன் கூடிய வெள்ளைநிற வேட்டியும், சந்தன நிறத்தில் சிறிய கழுத்துப்பட்டியோடு கூடிய திறந்த ழுக்கைச் சட்டை மற்றும் விசிறி மடிப்பு
 அல்லது நெடுங்கரையுடன் கூடிய துண்டு (1 செ.மீ. அகலமுள்ள இருகோடுகள் இருக்கலாம்)

பெண்களுக்கு:
7 செ.மீக்கு மேற்படாத அகலமுள்ள அரக்குக் கரைபோட்ட சந்தன நிறச் சேலையும் மற்றும் அரக்குநிற இரவிக்கையும்.

தமிழர் உடை வரலாறு:

"பண்டைய கோவில் சிற்பங்கள் ஓவியங்கள் வெறும் கற்பனையல்ல. அவை மேலாடை அணியும் நாகரிகம் வந்த பின்னரே முன்னைய நிலை இன்று ஆபாசமாகத் தோன்றுகின்றது. உயர்குடிப் பெண்கள் கச்சைக்கு மேலாகச் சட்டை அணிவதும் சில நூற்றண்டுகளின் முன் தோன்றிய வழக்கமே. மற்றைய பெண்களில் ஒரு பகுதியினர் மேல் சட்டையின்றி தாவணிச் சேலையால் மார்பை மறைப்பதும், தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் மார்பை மூடத்தக்கதாக நெஞ்சோடு மட்டும் சேலை கட்டுவதும் வழக்கமாக தொடர்ந்தது. இப்போக்கை இன்றும் கிராமங்களில் காணலாம்."

"இளம் பெண்களின் உடைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சேலை கட்டுவது மறைந்து சுரிதார் முதன்மை பெற்றுள்ளது. நகரங்களில் கல்லூரிக்குச் செல்லும் பெண்களில் சேலை கட்டிச் செல்பவர் அநாகரிகமானவராகினர். சேலை சிறைக்கைதிகள் போன்ற உடை, பஸ்களுக்கு ஓட முடியாது. ஸ்கூட்டர், சைக்கிள் ஓட்டுவதற்கும் ஒத்துவராது என்பதை அனுபவத்தில் கண்டனர். விலை மலிவானது; ஏற்றத்தாழ்வு காட்டாதது; விரைவாக நடக்க உதவுவது; இளமையாகக் காட்டுவது. இடையைக் காட்டி தேவையற்ற கவர்ச்சியை ஏற்படுத்த வேண்டியதில்லை எனப் பல காரணங்களே தென்நாட்டுச் சேலை பின்னடைய, வடநாட்டு சுரிதார் உடை நவீனமாக்கியது."

"ஆண்கள் அணியும் சட்டையும் அரைக்கால் அல்லது முழுக்கால் சட்டையும் 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தமிழ்நாட்டில் பெருவாரியான மக்களால் அறியப்படாதவையாகும். ஆங்கிலேயரும் நவாவுப் படையினர் எனப்படும் வடநாட்டு முசுலிம்களும் வந்த பின்னரே உடம்பின் மேற்பகுதியில் 'தைத்த சட்டை' அணியும் வழக்கம் புகுந்தது.

தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடையது.

Photo: நம் அனைவருக்கும் தமிழ் தெரியும். ஆனால் எத்தனை பேருக்கு அதன் அர்த்தம் தெரியும்...? தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே...!

தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடையது.

அ - அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாக்கரத்துள் பதி நிலையக்கரமாகும்.

இ - பதியைவிட்டு விலகாத சித்தை விளக்கும் வியவகாரத்தால் அனந்தாகார வியஷ்டி பேதங்காட்டும் ஜீவ சித்த கலையக்கரமாம்.

பதி சிதாத்ம கலைகளுக்காதாரமாகி உயிரினுக்கு உடலையொத்துக் குறிக்கப்படும் த்-ம்-ழ் எழுத்துக்களுக்கு உரை.

த் - ஏழாவது மெய். அறிவின் எல்லையைக் குறிக்கும்.
ம் - பத்தாவது மெய். ஞானத்தின் படியைக் குறிக்கும்.
ழ் - பதினைந்தாவது இயற்கையுண்மைச் சிற்ப்பியல் அக்கரம்.
நம் பிரபஞ்சத்தைக் குறிக்கும்.

சம்பு பக்ஷத்தால் அனாதியாய் - சித்த சித்தாந்த ஆரிஷ நீதிப்படி கடவுள் அருளாணையால் கற்பிக்கப்பட்டதும், எப்பாஷைகளுக்கும் பிதுர் (தந்தை) பாஷையென்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும், இனிமையென்று நிறுத்தம் சிந்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் தான் இயற்கையான சிறப்பியல் மொழியாகும்.

இவ்வாறு இராமலிங்க அடியகளார் கூறுவதைப் போல் சுருக்கமாகச் சொல்வதானால் "தமிழ் மொழியே அதி சுலபமாக சுத்த சிவானு பூதியைக் கொடுக்க வல்லது"

~ ஜெய்ஜி.
நம் அனைவருக்கும் தமிழ் தெரியும். ஆனால் எத்தனை பேருக்கு அதன் அர்த்தம் தெரியும்...? தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே...!

தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடையது.

அ - அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாக்கரத்துள் பதி நிலைய
க்கரமாகும்.

இ - பதியைவிட்டு விலகாத சித்தை விளக்கும் வியவகாரத்தால் அனந்தாகார வியஷ்டி பேதங்காட்டும் ஜீவ சித்த கலையக்கரமாம்.

பதி சிதாத்ம கலைகளுக்காதாரமாகி உயிரினுக்கு உடலையொத்துக் குறிக்கப்படும் த்-ம்-ழ் எழுத்துக்களுக்கு உரை.

த் - ஏழாவது மெய். அறிவின் எல்லையைக் குறிக்கும்.
ம் - பத்தாவது மெய். ஞானத்தின் படியைக் குறிக்கும்.
ழ் - பதினைந்தாவது இயற்கையுண்மைச் சிற்ப்பியல் அக்கரம்.
நம் பிரபஞ்சத்தைக் குறிக்கும்.

சம்பு பக்ஷத்தால் அனாதியாய் - சித்த சித்தாந்த ஆரிஷ நீதிப்படி கடவுள் அருளாணையால் கற்பிக்கப்பட்டதும், எப்பாஷைகளுக்கும் பிதுர் (தந்தை) பாஷையென்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும், இனிமையென்று நிறுத்தம் சிந்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் தான் இயற்கையான சிறப்பியல் மொழியாகும்.

இவ்வாறு இராமலிங்க அடியகளார் கூறுவதைப் போல் சுருக்கமாகச் சொல்வதானால் "தமிழ் மொழியே அதி சுலபமாக சுத்த சிவானு பூதியைக் கொடுக்க வல்லது"

பதினென் கணக்கு நூல்கள்

Photo: சங்கம் மருவிய காலம் 
நீதி இலக்கியம் 
பதினென் கணக்கு நூல்கள் 
 

திருக்குறள் 
குறள் வெண்பாவால் இரண்டு அடிகளில், முதல் அடியில் 4 சீர்களும் இரண்டாம் அடியில் 3 சீர்களும் அமைத்துப் பாடுவது குறள். 
இயற்றியவர் - திருவள்ளுவர் 
அறத்துப்பால் - 38 அதிகாரங்கள் 
பொருட்பால் - 70 அதிகாரங்கள் 
இன்பத்துப் பால் - 25 அதிகாரங்கள் 
1330 பாடல்களைக் கொண்டது. 

நாலடியார் 
நாங்கு அடிகளை உடையது. 
சமண முனிவர்கள் 400 பேர் எழுதிய பாடல்கள் 
காலம் - 7ஆம் நூற்றாண்டு 
அறம் - 13 அதிகாரங்கள் 
பொருள் - 24 அதிகாரங்கள் 
இன்பம் - 3 அதிகாரங்கள் 
மொத்தம் - 40 அதிகாரங்கள் 
நிலையாமையைப் பற்றிய பாடல்கள் மிகுதி. டாக்டர் ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 

நான்மணிக்கடிகை 
நாங்கு நவமனிகளாக ஆன மாலை. 
ஆசிரியர் - விளம்பி நாகனார் 
மணியான கருத்துக்களைக் கொண்ட பாடல்கள். 
 

கார் நாற்பது 
கார் காலம் பற்றிய 40 பாடல்களைக் கொண்ட நூல். 
தலைவன், தலைவி, தோழி, பாங்கன் ஆகியோரை வைத்து ஒரு நாடகம் போல் அமைந்த நூல். 
ஆசிரியர் - மதுரை கண்ணங்கூத்தனார் 
 

களவழி நாற்பது 
போர்க்களத்தின் நிலையைக் கூறும் நூல். 40 பாடல்களை உடையது. இது புறத்திணை நூல். 
ஆசிரியர் - பொய்கையார் 
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் 12 நூல்கள் நீதி நூல்கள். 
 

இனியவை நாற்பது 
இனிய கருத்துக்களை கூறும் 40 வெண்பாக்களை உடையது. 
ஆசிரியர் - பூதஞ்சேந்தனார் 
 

இன்னா நாற்பது 
தீயன தரும் நாற்பது என்பது பொருள். துன்பத்தைத் தருவன என்று கூறும் பாடல்களை கொண்டது. 
41 பாடல்களையுடையது 
ஆசிரியர் - கபிலர். இக்கபிலர் சங்க கால கபிலர் அல்லர். 
கள்ளுண்ணாமை, புலால் உண்ணாமையை வற்புறுத்திக் கூறியுள்ளார். 
4ஆம் நூற்றாண்டினர் என்பது பொது கருத்து. 
 

ஐந்திணை ஐம்பது 
ஐந்து நில ஒழுக்கங்களுக்கும் பத்து பத்து பாடல்களாக 50 பாடல்களை உடையது. இந்நூல் முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற முறையில் பாடப்பெற்றது. 
ஆசிரியர் - மாறன் பொறையனார் 
 

ஐந்திணை எழுபது 
ஐந்து நில ஒழுக்கங்களையும் பாடிய 70 பாடல்கள் கொண்ட நூல். குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற முறையில் ஒவ்வொரு நிலத்திற்கும் 14 பாடல்கள் உள்ளன. 
4 பாடல்கள் கிடைக்கவில்லை. 
ஆசிரியர் - மூவாதியார் (ஐந்தாம் நூற்றாண்டு) 
 

திணை மொழி ஐம்பது 
அகத்திணைப் பற்றிக் கூறும் 50 பாடல்கள். 
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற முறையில் அமைந்துள்ளது. 
ஆசிரியர் - கண்ணஞ்ச்சேந்தனார் 
 

திணை மாலை நூற்றைம்பது 
அகத்திணைப் பற்றி மாலையாக பாடிய 150 பாடல்களைக் கொண்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து நிலம் பற்றி அந்நிலத்திற்குறிய புணர்தல், பிரிதல் முதலிய ஒழுக்கங்கள் பாடப் பெற்றது. 
153 பாடல்கள் உள்ளன. 
ஆசிரியர் - கணிமேதாவியார் (ஏலாதியின் ஆசிரியரும் இவரே) 
 

கைந்நிலை 
கை என்பது அகத்திணை ஒழுக்கத்தை குறிக்கும் சொல். 
திணைக்கு 12 பாடல்களாக 60 பாடல்களைக் கொண்டது. நூல் முழுதும் கிடைக்கவில்லை. 
ஆசிரியர் - புல்லங்க்காடனார். 
 

திரிகடுகம் 
சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் அரைத்து கடுகு போல் அமைந்த மருந்திற்கு திரிகடுகம் என்று பெயர். உடல் வளர்ச்சிக்கு இம்மருந்து உதவுவது போல உள்ள வளர்ச்சிக்கு இந்நூல் உதவும். 3 கருத்துக்களை ஒவ்வொரு பாடலிலும் கூறுவதால் திரிகடுகம் என்ற பெயரைப் பெற்றது. 
101 வென்பாக்களை உடையது 
ஆசிரியர் - நல் ஆதனார். 
 

ஆசாரக்கோவை 
ஒழுக்கம், வாழும் ஒழுக்க விதிகளைக் கூறும் நூல். 
100 வெண்பாக்களை உடையது. 
ஆசிரியர் - கயத்தூர் பெருவாயில் முள்ளியார் 
 

பழமொழி நானூறு 
பழமையான சொல். ஒவ்வொரு பாடலும் பழமொழியால் முடிக்கப்பட்டுள்ளது. முது மொழி என்ற பெயரும் உண்டு. 
ஆசிரியர் - முன்றுறை அரையனார் 
 

சிறு பஞ்சமூலம் 
சிறிய ஐந்து வேர்கள். 
சிறிய வழுதுணை, நெருஞ்சி, சிறுமல்லி, பெருமல்லி, கண்டங்கத்திரி இவற்றின் வேர்களால் ஆன மருந்து. ஒவ்வொரு பாடலிலும் 5 கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. 
102 பாடல்கள். 
ஆசிரியர் - காரியாசான் சமணர். 
 

முதுமொழிக் காஞ்சி 
பழமொழி என்பது பொருள். காஞ்சி, பெண்கள் இடையில் அணியும் ஒரு அணிவகை. பல கருத்துக்களை கூறும் நூல். 
100 குறள் வெண் செந்துறைப் பாக்களாக கொண்டது. 
ஆசிரியர் - மதுரை கூடலூர் கிழார் 
5ஆம் நூற்றாண்டினர் 
 

ஏலாதி 
ஏலக்காய் போன்ற 6 பொருட்களைக் கொண்டு மருந்து தயாரிக்கப் படுகிறது. ஏலம், இலவங்கம், சிறு நாவல்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு, இந்த பொருட்களை இடித்து சூரணம் செய்வர். உடல் நோயைப் போக்கும் ஏலாதி மருந்தைப் போல உள்ள நோயைப் போக்க வல்லது. ஒவ்வொரு பாடலிலும் 6 உண்மைகள் கூறப்பட்டுள்ளது. 
81 பாடல்கள் 
ஆசிரியர் - கணி மேதாவியார் 
 

இன்னிலை 
பதினெண்கீழ்க்கணக்கு வெண்பாவில் இன்னிலை, கை நிலை என்பதையும் சேர்க்கும் போது 19 நூல்களாகின்றன. 
அறம் - 10, பொருள் - 9, இன்பம் - 12, வீட்டுப்பால் - 14, இல்லியல் - 8, துறவியல் - 6 என அமைக்கப்பட்டுள்ளது. 
ஆசிரியர் - பொய்கையார்
திருக்குறள் 
குறள் வெண்பாவால் இரண்டு அடிகளில், முதல் அடியில் 4 சீர்களும் இரண்டாம் அடியில் 3 சீர்களும் அமைத்துப் பாடுவது குறள்.
இயற்றியவர் - திருவள்ளுவர்
அறத்துப்பால் - 38 அதிகாரங்கள்
பொருட்பால் - 70 அதிகாரங்கள்
இன்பத்துப் பால் - 25 அதிகாரங்கள்
1330 பாடல்களைக் கொண்டது.

நாலடியார்
நாங்கு அடிகளை உடையது.
சமண முனிவர்கள் 400 பேர் எழுதிய பாடல்கள்
காலம் - 7ஆம் நூற்றாண்டு
அறம் - 13 அதிகாரங்கள்
பொருள் - 24 அதிகாரங்கள்
இன்பம் - 3 அதிகாரங்கள்
மொத்தம் - 40 அதிகாரங்கள்
நிலையாமையைப் பற்றிய பாடல்கள் மிகுதி. டாக்டர் ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

நான்மணிக்கடிகை
நாங்கு நவமனிகளாக ஆன மாலை.
ஆசிரியர் - விளம்பி நாகனார்
மணியான கருத்துக்களைக் கொண்ட பாடல்கள்.


கார் நாற்பது
கார் காலம் பற்றிய 40 பாடல்களைக் கொண்ட நூல்.
தலைவன், தலைவி, தோழி, பாங்கன் ஆகியோரை வைத்து ஒரு நாடகம் போல் அமைந்த நூல்.
ஆசிரியர் - மதுரை கண்ணங்கூத்தனார்


களவழி நாற்பது
போர்க்களத்தின் நிலையைக் கூறும் நூல். 40 பாடல்களை உடையது. இது புறத்திணை நூல்.
ஆசிரியர் - பொய்கையார்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் 12 நூல்கள் நீதி நூல்கள்.


இனியவை நாற்பது
இனிய கருத்துக்களை கூறும் 40 வெண்பாக்களை உடையது.
ஆசிரியர் - பூதஞ்சேந்தனார்


இன்னா நாற்பது
தீயன தரும் நாற்பது என்பது பொருள். துன்பத்தைத் தருவன என்று கூறும் பாடல்களை கொண்டது.
41 பாடல்களையுடையது
ஆசிரியர் - கபிலர். இக்கபிலர் சங்க கால கபிலர் அல்லர்.
கள்ளுண்ணாமை, புலால் உண்ணாமையை வற்புறுத்திக் கூறியுள்ளார்.
4ஆம் நூற்றாண்டினர் என்பது பொது கருத்து.


ஐந்திணை ஐம்பது
ஐந்து நில ஒழுக்கங்களுக்கும் பத்து பத்து பாடல்களாக 50 பாடல்களை உடையது. இந்நூல் முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற முறையில் பாடப்பெற்றது.
ஆசிரியர் - மாறன் பொறையனார்


ஐந்திணை எழுபது
ஐந்து நில ஒழுக்கங்களையும் பாடிய 70 பாடல்கள் கொண்ட நூல். குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற முறையில் ஒவ்வொரு நிலத்திற்கும் 14 பாடல்கள் உள்ளன.
4 பாடல்கள் கிடைக்கவில்லை.
ஆசிரியர் - மூவாதியார் (ஐந்தாம் நூற்றாண்டு)


திணை மொழி ஐம்பது
அகத்திணைப் பற்றிக் கூறும் 50 பாடல்கள்.
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற முறையில் அமைந்துள்ளது.
ஆசிரியர் - கண்ணஞ்ச்சேந்தனார்


திணை மாலை நூற்றைம்பது
அகத்திணைப் பற்றி மாலையாக பாடிய 150 பாடல்களைக் கொண்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து நிலம் பற்றி அந்நிலத்திற்குறிய புணர்தல், பிரிதல் முதலிய ஒழுக்கங்கள் பாடப் பெற்றது.
153 பாடல்கள் உள்ளன.
ஆசிரியர் - கணிமேதாவியார் (ஏலாதியின் ஆசிரியரும் இவரே)


கைந்நிலை
கை என்பது அகத்திணை ஒழுக்கத்தை குறிக்கும் சொல்.
திணைக்கு 12 பாடல்களாக 60 பாடல்களைக் கொண்டது. நூல் முழுதும் கிடைக்கவில்லை.
ஆசிரியர் - புல்லங்க்காடனார்.


திரிகடுகம்
சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் அரைத்து கடுகு போல் அமைந்த மருந்திற்கு திரிகடுகம் என்று பெயர். உடல் வளர்ச்சிக்கு இம்மருந்து உதவுவது போல உள்ள வளர்ச்சிக்கு இந்நூல் உதவும். 3 கருத்துக்களை ஒவ்வொரு பாடலிலும் கூறுவதால் திரிகடுகம் என்ற பெயரைப் பெற்றது.
101 வென்பாக்களை உடையது
ஆசிரியர் - நல் ஆதனார்.


ஆசாரக்கோவை
ஒழுக்கம், வாழும் ஒழுக்க விதிகளைக் கூறும் நூல்.
100 வெண்பாக்களை உடையது.
ஆசிரியர் - கயத்தூர் பெருவாயில் முள்ளியார்


பழமொழி நானூறு
பழமையான சொல். ஒவ்வொரு பாடலும் பழமொழியால் முடிக்கப்பட்டுள்ளது. முது மொழி என்ற பெயரும் உண்டு.
ஆசிரியர் - முன்றுறை அரையனார்


சிறு பஞ்சமூலம்
சிறிய ஐந்து வேர்கள்.
சிறிய வழுதுணை, நெருஞ்சி, சிறுமல்லி, பெருமல்லி, கண்டங்கத்திரி இவற்றின் வேர்களால் ஆன மருந்து. ஒவ்வொரு பாடலிலும் 5 கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
102 பாடல்கள்.
ஆசிரியர் - காரியாசான் சமணர்.


முதுமொழிக் காஞ்சி
பழமொழி என்பது பொருள். காஞ்சி, பெண்கள் இடையில் அணியும் ஒரு அணிவகை. பல கருத்துக்களை கூறும் நூல்.
100 குறள் வெண் செந்துறைப் பாக்களாக கொண்டது.
ஆசிரியர் - மதுரை கூடலூர் கிழார்
5ஆம் நூற்றாண்டினர்


ஏலாதி
ஏலக்காய் போன்ற 6 பொருட்களைக் கொண்டு மருந்து தயாரிக்கப் படுகிறது. ஏலம், இலவங்கம், சிறு நாவல்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு, இந்த பொருட்களை இடித்து சூரணம் செய்வர். உடல் நோயைப் போக்கும் ஏலாதி மருந்தைப் போல உள்ள நோயைப் போக்க வல்லது. ஒவ்வொரு பாடலிலும் 6 உண்மைகள் கூறப்பட்டுள்ளது.
81 பாடல்கள்
ஆசிரியர் - கணி மேதாவியார்


இன்னிலை
பதினெண்கீழ்க்கணக்கு வெண்பாவில் இன்னிலை, கை நிலை என்பதையும் சேர்க்கும் போது 19 நூல்களாகின்றன.
அறம் - 10, பொருள் - 9, இன்பம் - 12, வீட்டுப்பால் - 14, இல்லியல் - 8, துறவியல் - 6 என அமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் - பொய்கையார்