Sunday 29 September 2013

விடியலை நோக்கி ஓர் பயணம்

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை!
தீர்ப்பு... விவாகரத்து!
அப்பாவிடம் 5 வருடம்!
அம்மாவிடம் 5 வருடம்!
தவிக்கும் குழந்தையின் பெயர்
"தமிழ் நாடு"
- விடியலை நோக்கி ஓர் பயணம்

வெளிநாட்டு படங்களை பார்த்து # காப்பிஅடித்து எடுக்கப்பட்ட # டமில்சினிமாக்களின் பட்டியல்:

21 grams © # சர்வம் Bangkok Dangerous © # பட்டியல் Network © # வேகம் Brewster’s Millions © # அருணாசலம் Hardcore © # மகாநதி Planes Trains and Automobiles © # அன்பேசிவம் What bob can do © # தெனாலி Very Bad things © # பஞ்சதந்திரம் Barefoot in the park © # அலைபாயுதே Hot bubblegum and American Pie © # பாய்ஸ் Butch Cassidy & The Sundance Kid © # திருடாதிருடா Sense and Sensibility © # கண்டுகொண்டேன்கண்டுகொண்டேன் Shop around the corner © # காதல்கோட்டை Big © # நியூ Sliding Doors © # 12B Fear © # காதல்கொண்டேன் Too Much © # காதலாகாதலா She Devil © # சதிலீலாவதி Corsican Brothers © # அபூர்வசகோதரர்கள் Life of David Gale © # விருமாண்டி.

வகைவகையான வீணைகள்!

வீணை என்று சொன்னதுமே எல்லோருக்கும் சரஸ்வதியின் நினைவு தான் வரும். ஆனால் 32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன.
1. பிரம்மதேவனின் வீணை- அண்டம், 2. விஷ்ணு- பிண்டகம், 3. ருத்திரர்- சராசுரம், 4. கவுரி- ருத்ரிகை, 5. காளி- காந்தாரி, 6. லட்சுமி- சாரங்கி, 7. சரஸ்வதி- கச்சபி எனும் களாவதி, 8. இந்திரன்- சித்தரம், 9. குபேரன்- அதிசித்திரம், 10. வருணன்- கின்னரி, 11. வாயு- திக்குச்சிகை யாழ். 12. அக்கினி- கோழாவளி, 13. நமன்- அஸ்த கூர்மம், 14. நிருதி- வராளி யாழ், 15. ஆதிசேடன்- விபஞ்சகம், 16. சந்திரன்- சரவீணை, 17. சூரியன்- நாவீதம், 18. வியாழன்- வல்லகி யாழ், 19. சுக்கிரன்- வாதினி, 20- நாரதர்- மகதி யாழ், 21. தும்புரு- களாவதி (மகதி), 22. விசுவாவசு- பிரகரதி, 23. புதன்- வித்யாவதி, 24. ரம்பை- ஏக வீணை, 25. திலோத்தமை- நாராயணி. 26. மேனகை- வாணி, 27. ஊர்வசி-லகுவாக்ஷி, 28. ஜயந்தன்- சதுசும், 29. ஆஹா, ஊஹூ தேவர்கள்- நிர்மதி, 30. சித்திரசேனன்- தர்மவதி (கச்சளா) 31. அனுமன்- அனுமதம். 32 வது வகை வீணையை வாசிப்பவன், ராவணன். அவனது வீணையின் பெயர், ராவணாசுரம்.

அவளொரு பேரழகி

அவள் கூந்தல்... கருப்பு புதைகுழி
அதன் நீளம்... வட்டியோடு வளர்ந்த அசல்
அவள் உச்சந்தலை வகிடு... அடர்ந்த காட்டிற்குள் அழைத்துச் செல்லும் ஒற்றையடிப்பாதை
அவள் பொட்டு... பாதைக்கு போடப்பட்ட பூட்டு
அவள் நெற்றி... விலைக்குக் கிடைக்காத வானவில்
அவள் விழிகள்... குளத்தில் குளிக்கும் குட்டி மீன்கள்
அவள் மூக்கு... மூங்கில் தண்டில், நிலவில் அமைத்த முக்கோண கூடாரம்
அவள் இதழ்கள்... அதிகாலையில் இறக்கிய பனங்-கள்
அவள் கன்னம்... கலக்கி வைத்து காத்துக்கிடக்கும் தேன்-கிண்ணம்
அவள் கழுத்து... ஒளிவீசும் நிலவைத் தாங்கும் ஒற்றைக்கால் சுமைதாங்கி
அவள் மார்பகங்கள்... படர்ந்து கிடக்கும் பந்தலில் மலரத் துடிக்கும் மல்லிகை மொட்டுக்கள்
அவள் இடை... மானுடர்கள் வழுக்கி விழும் மதுபானக்கடை
அவள் விரல்கள்... கணு வைத்து நறுக்கப்பட்ட கரும்புத் துண்டுகள்
அவள் அங்கம்... கோலாரில் ஒளித்து வைத்த மாசில்லா தங்கம்
அவள் உடல்... வளைந்து செல்லும் வைகையாற்றில் உயிரைக் கொள்ளும் நீர் சுழற்சி
அவள் பாதம்... செடியில் உதிர்ந்த பூக்களில் மீதம்
அவளொரு அழகி, எட்டாவது அதிசயமாய் எட்டிப் பார்க்கும் பேரழகி..!

தான் அழகி என்ற "திமிரு" அவளுக்கு...!!

தான் அழகி என்ற "திமிரு" அவளுக்கு...!! =================================== "அய்யோ" என அவளின் அழகை பார்த்தவுடன் சொல்ல தோன்றும்..!!
எத்தனை திமிரு அவளுக்கு இருக்க வேண்டும்..!! எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது ஆனால் அவளின் அழகுக்கு எல்லையே இல்லை என்பது அவளின் அறிவில்லா மூடநம்பிக்கை..!!
சர்வாதிகாரம் செய்கிறாள் அவள், அழகென்னும் ஒற்றை ஆயுதம் கொண்டு அத்தனையும் வென்று விடலாம் என றெக்கை கட்டி பறக்கிறாள்..!! நான் தலையில் அடித்து கொண்டேன்..!!
கண்மூடித்தனமாய் நம்புகிறாள் அவள், கட்டை விரலை வைத்து உலகிற்கே தன் அழகை விளம்பரம் செய்ய முடியும் என கனவில் மிதக்கிறாள்..!!! நான் எனக்குள் சிரித்து கொண்டேன்..!!
எங்கிருந்து வந்ததோ அவளுக்கு இவ்வளவு தைரியம், வீணாக போட்டிக்கு அழைக்கிறாள், அழகில் சிறந்தது நீயா இல்லை நானா என்று கண்ணாடியிடம் சண்டையிடுகிறாள்..!! நான் அங்கிருந்து ஓடி விட்டேன்..!!
மிகச் சரியான கிறுக்கி அவள்..!! அழகை கொண்டு எல்லாவற்றையும் அடிமையாக்க பார்க்கிறாள், அழகினால் வந்த ஆணவமும்,திமிரும் நிலைக்க போவதில்லை என்பதே அவளுக்கு புரியாத போது அவளை கிறுக்கி மட்டுமல்ல, அழகு பேய் என சொன்னாலும் தவறில்லை..!!

இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.

1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார்.
2) உங்களின் மோசமானச் சமையலையும் சிரித்துக் கொண்டே சாப்பிடுவார்.
3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார். ஒவ்வொரு சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார்.
4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர மாட்டார். உங்கள் குறைகளை நிறைகளாக்க முயற்சிப்பார்.
5) உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால், எத்தனை அழகான பெண்கள் முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய் தெரிவீர்கள்.
6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில், அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. வேறு எந்த வேலையிலும் கவனம் செல்லாது .
7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.
8. உங்களை தொலைவில் இருந்துப் பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள் மௌனங்கள் அனைத்தையும் அழகாய் மொழி பெயர்ப்பார்.
9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார். எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ள உதவுவார்.
10) உங்களை வேலைக்காரியாய், சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு, குழந்தையாய், தோழியாய், தாரமாய், தாயாய் பார்ப்பார்.
11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு, உங்கள் அழுகை பார்த்து அதிகம் வருந்துவார். நீங்கள் சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார்.

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..

1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள்
2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.
3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள் .
4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்.
5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க.
6)சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள்.நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்.
7)நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள் கவலையாக இருந்தால் , அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள்.
8)உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவளை பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள்.
9)உங்கள் குடும்பத்திலும் நண்பர் வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும் நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள்.
10)நீங்கள் தொலைப் பேசியில் அழைக்காவிட்டாலும் அவள் அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும் , அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும் உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக் கொள்வாள்.

GOOGLE

GOOGLE :- Global Organisation Of Oriented Group Language of Earth APPLE:- Asian Passenger Payload Experiment HP :- Hewlett-Packard IBM:- International Business Machines Corporation HCL:-Hindustan Computer Limited WIPRO:- Western India Product Limited GE:-General Electronics INFOSYS:-Information System TCS:- Tata Consultancy Services AOL:- American Online BPL:- British Process Laboratory INTEL:- Integrated Electronics CISCO:- Computer Information System Company DELL:- michael DELL SONY:-Sound Of New York AMD:- Advance micro devices LENOVO:- LE(Legend),NOVO(New) COMPAQ:- Compatibility And Quality...

இந்த தேசத்துல .....!!!!!

அவங்க கழுத்துல இருந்ததவிட அடகுக்கடையிலதான் ரொம்பநாள் இருந்துருக்கு அம்மாவோட தாலி.
துருப்புடிச்சு தொவண்டாலும் அடிக்கடி செயின் கழன்டாலும் இப்பவரைக்கும் ஓடிக்கிட்டிருக்கு அப்பாவோட சைக்கிள்.
சீமத்தண்ணி பத்தாம திரிகருகி சிறுத்து எரியுது சிம்னி வெளக்கு.
கொரகொரன்னு எரஞ்சுகிட்டே கொஞ்சங்கொஞ்சம் பாடுது ஒடஞ்சு ஒட்டுப்போட்ட ரேடியோ.
கஞ்சிவடிக்க அள்ளுன காப்படி அரிசிய சொளகுல போடச்சா காவாசி எலிப்புழுக்க.
நடுராத்திரி எந்திருச்சு தண்ணிவிட்டு அணச்சு அடுத்தநாளைக்கு எடுத்துவச்ச கொசுப்பத்தி.
நெனச்சு அழுவுறதுக்கு நெறையா சோகம் இருந்தாலும் உழச்சு திங்கிரோங்கிற ஒரே நெனப்பு தான்
ஏழ எங்க உசுர காப்பாத்துது வாழ வழியத்த இந்த தேசத்துல .....!!!!!

"மனைவி என்பவள் கணவனுக்கு

"மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை போன்றவள் ஆவாள். . !
கணவனாகிய நீங்கள் சிரித்தால் அவளும் சிரிப்பாள். . !
நீங்கள் அழுதால் அவளும் அழுவாள். . !
ஆனால் நீங்கள் முறைத்தாலோ அல்லது ஏசினாலோ அவள் உடைந்துவிடுவாள். . !
தயவு செய்து உங்களின் கவலைகளை கண்ணாடியிடம் பரிமாறுங்கள். . !
கோபத்தை காட்டி அதனை உடைத்து விடாதீர்கள்!

பதில் சொல்லாத டயலாக்ஸ்

பதில் சொல்லாத டயலாக்ஸ் [ ] 1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா? [இல்லை தூக்குல தொங்கப்போறேன் 2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா? [ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-)] 3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு......மச்சி எங்கிருக்கே? [ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி ] 4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா? [ இல்லை கும்மி அடிச்சேன் ] 5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா? [ இல்லை அமெரிக்கா போறேன் ] 6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா? [ இல்லை புளியம்பழம் ] 7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில் நிக்கிம்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பன்றே? [ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன் ] 8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும்போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா? [ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன் மச்சி ] 9. எழுதிட்டிருக்கும் போது, நண்பன்.... மச்சி எழுதிட்டிருக்கியா? [ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன் ] 10. தடுக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா? [ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக்கேன் ]

பழமையில் தான் பசுமை இருக்கிறது

குருவிகளின் சத்தம் கேட்டு காலை பொழுதில் கண் விழித்ததுண்டா? கம்மாக்கரை தண்ணீரில்கால் நனைத்ததுண்டா? காத்தாட வரப்பின் மேல் நடந்ததுண்டா? முட்டி முட்டி பால் குடிக்கும் கன்று குட்டியை ரசித்ததுண்டா? கொய்யாவை கொத்தி திண்னும் அணிலை ரசித்ததுண்டா? மாலையில் மலரும் மல்லிகையை முகர்ந்ததுண்டா? இரட்டை மாட்டு வண்டியின் சலங்கை சத்தத்திற்கு தாளம் போட்டதுண்டா? நடவு நடும் அக்காக்களின் எசப்பாட்டு கேட்டதுண்டா? ஏர் பிடிக்கும் அண்னண்களின் பின்னால்நடந்ததுண்டா? கொட்டும் மழையில் குடையில்லாமல் நனைந்ததுண்டா? மண் வாசனையில் தண்னிலை மறந்ததுண்டா? வாசலில் ஓடும் மழை நீரில் காகித கப்பலும் கத்திக் கப்பலும் விட்டதுண்டா? பாசமாய் வளர்த்த ஆட்டுக் குட்டி அடிபட்டபோது அதற்காக அழுததுண்டா? ஆலம் விழுதில் ஊஞ்சல் ஆடியதுண்டா? அரச இலையில் பீப்பி செய்து ஊதியதுண்டா? பாலைப்பூ காத்தாடி தெரியுமா? சப்பாத்திகள்ளி பழம் திண்னதுண்டா? கம்மஞ்சோற்றின் வாசம்தெரியுமா? அம்மா அடிக்க கை ஓங்கும் போது ஓடிப்போய் தாத்தாவின்வேட்டிக்குள்ளும ் பாட்டியின் முந்தானைக்குள்ள ும் ஒளிந்ததுண்டா? அக்கா, அண்ணனோடு விளையாடும் போது வேண்டும் என்றே தோற்று நம் வெற்றியை கொண்டாடும் பாசத்தை அனுபவித்ததுண்டா ? அத்தைமார்களின் மாமன்மார்களின் சீண்டல்களால் சினுங்கியதுண்டா ? ஊர் பேர் தெரியாத வழிபோக்கனுக்கு உணவிட்டு அவன் பசியாறிய முகம் கண்டு மகிழ்ந்ததுண்டா? பாட்டியின் மடியில் படுத்து பழங்கதைகள் கேட்டதுண்டா? தாத்தாவின் மீசையை முறுக்கியதுண்டா ? இரவில் நிலவின் ஒளியில் உருண்டை சோறு திண்னதுண்டா? இவற்றையெல்லாம் அனுபவிப்பேயானால ் நீ ஆசீர்வதிக்கப்பட ்டவன்..... இல்லையனில் ரத்தமும் சதையுமான உணர்வற்ற, பணத்திற்காக நடமாடும்எந்திரம் கோட்டும் சூட்டும் போட்டுகொண்டு குளிக்காமல் சென்ட் அடித்துக்கொண்டு பணம்சம்பதிப்பது மட்டுமே மகிழ்ச்சியான வழ்க்கைஇல்லை அதையும் தாண்டி நாம் கண்டுகொள்ளாமல் விட்டஉறவுகளும் உணர்வுகளும் காத்துக்கொண்டிர ுக்கிறது நம் அன்பிற்காக... பழமையில் தான் பசுமை இருக்கிறது பாசம் கன‌க்கும் உறவும் இருக்கிறது....

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? பாகம் - 2

1.தரைக் கூட்ட இருக்கும் பாவாடையை தூக்கி பிடித்த படி பாத கொலுசில் ஜதி பாடி நடந்து வரும் போது. 2.பேருந்தில் தெரிந்தே இடிப்பவனுக்கு யாருக்குமே தண்டனை தரும் போது. 3.நான் இப்படியெல்லாம் வளர்ந்தேன் என்று பெருமை பேசாமல் உன்னை அழகாய் வளர்த்திருக்கிறார்கள் என்று அனைவரையும் சொல்ல வைக்கும் போது. 4.பொன்னகையே இல்லாமல் புன்னகையால் மட்டுமே தன்னை அலங்காரம் செய்து கொள்ளும் போது. 5.கோபத்தை உள்ளடக்காமல், பட பட வென எண்ணையில் போட்ட கடுகாய் பொறிந்துவிட்டு பின் தனியாய் அமர்ந்து அழும் போது. 6.ஆண்களை அடக்காமல் தானும் அடங்காமல் சமமாய் நிற்பதே பெண்ணுரிமை என்பதை உணரும் போது. 7.வாயாடி என யார் பட்டம் தந்தாலும் வாய் பேசுவதை நிறுத்தாமல் தன் இயல்பு நிலையிலேயே இருக்கும் போது. 8.அத்தி பூத்தாற் போல் அவ்வப்போது தன்னை அறியாமலேயே வெட்கப் போது. 9.தன்னை விட பெரிய பாதுகாப்பு தனக்கு வேறு யாருமில்லை போது. 10.இவ்வளவு தான் உன் சுதந்திரம் என்பதை யாரும் சொல்வதற்கு முன்னரே, தன் சுதந்திரத்தின் எல்லையை தானே வகுத்துக் கொள்ளும் போது. 11.புல்லில் தங்கிய பனித்துளி போல ஈரக் கூந்தலின் நுனியில் இருந்து சொட்டும் தண்ணீரை தட்டி விட்ட படி கூந்தலை உலர்த்தும் போது. 12.தெரிந்த கேள்விக்கு தெரியாது என்றும் பிடித்ததை பிடிக்காது என்றும் வா என்னும் இடத்தில் போ என்றும் மாற்றி மாற்றி பதில் சொல்லி ஆண்களை குழப்பும் போது. 13.தனக்காக கண்ணீர் சிந்தும் ஆண் கிடைத்தால் அவனை எப்போதும் அழவிடாமல் பார்த்துக் கொள்ளும் போது. மனதால் வீரமாக , குணத்தால் அன்பாக , செயலால் நேர்மையாக இருக்கும் எல்லா பெண்களுமே அழகு தான்.

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது.
2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது.
3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.
4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.
5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.
6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது.
7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது.
8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது.
9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது.
10.ஆபாசமில்லாத உடையணிந்து அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது.
11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது,நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது.
12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது.

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று கண்ணாடியில் பார்க்கும் போது.
2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது.
3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது.
4.எவ்வளவு முரடனாக இருந்தாலும் , தன் வீரத்தையும் திமிரையும் ஓரங்கட்டிவிட்டு , பெண்ணிடம் பணிவாய் பேசும் போது.
5. சொந்த உழைப்பில் கிடைத்த தன் முதல் மாத சம்பளத்தை கை நீட்டி வாங்கும் போது.
6.காத்திருக்க முடியாதென்றுச் சொன்ன காதலியை தன் குடுபத்திற்காக தியாகம் செய்யும் போது.
7.தன் தங்கைக்கு தான் இன்னொரு தந்தை என்பதை உணரும் போது.
8.இரு சக்கர வண்டியை உர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் என உறுமாமல், சிக்னலில் வண்டியை நிறுத்தி விட்டு கண்ணாடியில் தலை முடியை சரி செய்யும் போது.
9.வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே நடக்கும் போது.
10.அப்பாவிடம் அதிகம் பேசாவிட்டாலும் கூட அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் தெரிந்து வைத்திருக்கும் போது.

எப்போதெல்லாம் மகள் அழகாய் தெரிவாள் அப்பாக்களுக்கு??

எப்போதெல்லாம் மகள் அழகாய் தெரிவாள் அப்பாக்களுக்கு??
பிறந்தவுடன் கைகளில் சுமக்கையில் அழகு..
முகம் பார்த்து சிரிக்கையில் அழகு...
கை பிடித்து நடக்கையில் அழகு...
தரை கூட்ட பட்டுப்பாவாடை கட்டி தத்தி தத்தி நடக்கையில் அழகு...
ரெட்டை சடையிட்டு துள்ளி துள்ளி வருகையில் அழகு...
தவறு செய்துவிட்டு தன் சிரிப்பால் தவறை மறைக்கையில் அழகு...
தாவணி கட்டியபோது வந்த நாணத்திலும் அழகு...
கைகளை சுட்டுக்கொண்டு எனக்காக சமைக்கையில் அழகு...
என் மகளாய் இருந்து வேறொருவர் மனைவியான போதும் அழகு...
என் மகள் என்னும் குட்டி தேவதை அவளின் குட்டி தேவதையை பெற்றெடுத்தபோதும் அழகு...
அப்பாக்களுக்கும் மகள்கள் என்றுமே அழகு தான்.

Wednesday 17 April 2013

இந்தியா


1. ஆணின் இதயத்தை விட பெண்ணின் இதயம் வேகமாக துடிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

2. புகழ்பெற்ற பிரெஞ்சு வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க் பிறந்தது மே 30, 1431

3. கைவிளக்கேந்திய காரிகை நைட்டிங்கேல் அம்மையார் பிறந்தது மே 12, 1820

4. இதுவரை ஒன்பது பெண்கள் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ளனர்.

5. உலகின் முதல் விண்வெளி வீராங்கணை வாலண்டினா தெரஸ்கோவா 45முறை பூமியை வெற்றிகரமாக வலம் வந்தவர்.

6. இரண்டுமுறை நோபல் பரிசு பெற்ற மேடம் கியுரி சிறுவயதில் வீட்டுவேலை செய்யும் வேலைக்கார சிறுமியாக தம் வாழ்க்கையை பல கஷ்டங்களுக் கிடையே துவக்கினார்.

7. ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்திய பெண் ஆரதி சாகா.

8. ஆங்கிலக் கால்வாயை மிக வேகமாக நீந்திய ஒரே ஆசிய வீராங்கனை அனிதா சூட். 81/4 மணி நேரத்தில் நீந்திக்கடந்தார்.

9. இந்திய விமானப்படையில் முதன் முதலில் பெண்கள் ஜூலை19,1993ல் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

10. வெளிநாட்டு தூதுவராக சென்ற முதல் இந்தியப் பெண் டாக்டர் விஜயலட்சுமி பண்டிட்.

11. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

12. உலகின் முதல் பெண் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா.

13. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் திருமதி பாத்திமா பீவி.

14. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி திருமதி பிரதீபா பாட்டில்.

15. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியுசிலாந்து.

16. இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி அண்ணா சாண்டி.

17. இந்தியாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெண்மணி

18. மிகக் குறைந்த வயதில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் வென்ற பெண்மணி மார்டினா ஹிங்கிஸ்.

19. இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் வசந்தி

20. இந்தியாவின் முதல் பெண் பைலட் துர்கா பேனர்ஜி

21. இந்தியாவை ஆண்ட முதல் பெண் சுல்தானா ரஸியா பேகம்.

22. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும் பெண் சகுந்தலா தேவி.

23. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண் கல்பனாசாவ்லா

24. இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபா நாயகர் மீரா குமார்.

25. இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுஜேதா கிருபாளினி......

Thursday 14 March 2013

பிரபாகரன் ஒரு ஒப்பற்ற புரட்சியாளன் - மரடோனா


பிரபாகரன் ஒரு ஒப்பற்ற புரட்சியாளன் - மரடோனா

பிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் இறுக்கக் கட்டியணைத்த மரடோனா! தமிழர்களிற்கு தெரியாத பிரபாகனின் மகிமை மரடோனாவிற்கு தெரிந்துள்ளது!!

உலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக் கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் இன்றும் துளியும் குறையவில்லை என்றால் மிகையில்லை.

ஆர்ஜென்ரீனா நாட்டின் கால்பந்தாட்ட முகவரியான மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தார். அவர் சென்ற இடங்கள் எல்லாம் ரசிகர்கள் குவிந்து பார்த்து மகிழ்ந்தார்கள்.

இந்திய சுற்றுப்பயணத்தில் ஓர்நாள் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது விடுதிக்கு வெளியே ஏற்பட்ட ஆரவாரம் தனது ரசிகர்களுடையதென உணர்ந்து அவர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது வாயிலில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவலரிற்கு கைகொடுத்து வணக்கத்தை தெரிவித்த மரடோனா அவரது பெயரை கேட்டுள்ளார். ஆனால் அந்த காவலருக்கு அது புரிந்திருக்கவில்லை.

அப்படியிருந்தும் அந்த காவலரது சீருடையில் அவருடைய பெயர் குத்தப்பட்டிருந்த பெயர்பட்டியை பாரத்து உற்சாகமான மரடோனா அந்த காவலரை இறுக்கக் கட்டியணைத்து பேருமகிழ்வடைந்துள்ளார். அந்தக்காவலரது பெயர் பிரபாகரன். நடப்பவை அந்த காவலரிற்கு என்னவென்று ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருந்தார்.

இதனையுனர்ந்த மரடோனா தனது கையில் பச்சை குத்தியுள்ள புரட்சியாளர் சேகுவேராவின் படத்தை காட்டி புரட்சி வீரரான சேகுவேராவை மிகவும் பிடிக்கும் அதைவிட பிரபாகரனையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். பிரபாகரன் ஒரு புரட்சியாளர் என்றும் ஒப்பற்ற ஒரு புரட்சியாளன் என்று புகழ்ந்தார் அந்த பெயரை நீங்கள் வைத்து இருக்கிறீர்கள் அதான் உங்களை சந்தோஷத்தில் கட்டி அணைத்தேன் என்றார்

புரட்சியின் நேற்றைய உருவான சேகுவேராவை பச்சைகுத்தியுள்ள மரடோனா இன்றைய புரட்சியின் வடிவமான பிரபாகரனை இதயத்தில் பதித்துள்ளார்.

பிரபாகரன் என்ற பெயருடைய காவலரை கண்டதற்கே இவ்வளவு மகிழ்ச்சியடைந்துள்ளார் என்றால் பிரபாகர னை எந்தளவிற்கு நேசிக்கின்றார் மரடோனா.

தேடாமல் கிடைத்தால் அதன் அருமை தெரியாது என்பார்கள். அதுபோல தமிழினத்தின் விடுதலையை (சில தமிழர்கள்) விரும்பாத சூழ்நிலையில் பிரபாகரன் அவர்களே தாமாக முன் வந்து விடுதலைக்கான போராட்டத்தை நடத்தினார்

எம்மவர்களில் எத்தனையோ பேர் பிரபாகரனது விடுதலைப் போராட்டத்தையும் போராட்ட வழி முறைகளையும் கடுமையாக விமர்சித்து வருவதுடன் பங்களிக்காது ஒதுங்கியே இருந்து வருகின்றார்கள். ஆனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் தமிழினத் திற்கு நேரடி சம்பந்தமில்லாத மரடோனா தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது மகிமையினை உணர்ந்துள்ளார் என்பது உலகத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய விடையமாகும்.
பிரபாகரன் ஒரு ஒப்பற்ற புரட்சியாளன் - மரடோனா

 பிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் இறுக்கக் கட்டியணைத்த மரடோனா! தமிழர்களிற்கு தெரியாத பிரபாகனின் மகிமை மரடோனாவிற்கு தெரிந்துள்ளது!!

உலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக் கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் இன்றும் துளியும் குறையவில்லை என்றால் மிகையில்லை.

ஆர்ஜென்ரீனா நாட்டின் கால்பந்தாட்ட முகவரியான மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தார். அவர் சென்ற இடங்கள் எல்லாம் ரசிகர்கள் குவிந்து பார்த்து மகிழ்ந்தார்கள்.

இந்திய சுற்றுப்பயணத்தில் ஓர்நாள் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது விடுதிக்கு வெளியே ஏற்பட்ட ஆரவாரம் தனது ரசிகர்களுடையதென உணர்ந்து அவர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது வாயிலில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவலரிற்கு கைகொடுத்து வணக்கத்தை தெரிவித்த மரடோனா அவரது பெயரை கேட்டுள்ளார். ஆனால் அந்த காவலருக்கு அது புரிந்திருக்கவில்லை.

அப்படியிருந்தும் அந்த காவலரது சீருடையில் அவருடைய பெயர் குத்தப்பட்டிருந்த பெயர்பட்டியை பாரத்து உற்சாகமான மரடோனா அந்த காவலரை இறுக்கக் கட்டியணைத்து பேருமகிழ்வடைந்துள்ளார். அந்தக்காவலரது பெயர் பிரபாகரன். நடப்பவை அந்த காவலரிற்கு என்னவென்று ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருந்தார்.

இதனையுனர்ந்த மரடோனா தனது கையில் பச்சை குத்தியுள்ள புரட்சியாளர் சேகுவேராவின் படத்தை காட்டி புரட்சி வீரரான சேகுவேராவை மிகவும் பிடிக்கும் அதைவிட பிரபாகரனையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். பிரபாகரன் ஒரு புரட்சியாளர் என்றும் ஒப்பற்ற ஒரு புரட்சியாளன் என்று புகழ்ந்தார் அந்த பெயரை நீங்கள் வைத்து இருக்கிறீர்கள் அதான் உங்களை சந்தோஷத்தில் கட்டி அணைத்தேன் என்றார்

 புரட்சியின் நேற்றைய உருவான சேகுவேராவை பச்சைகுத்தியுள்ள மரடோனா இன்றைய புரட்சியின் வடிவமான பிரபாகரனை இதயத்தில் பதித்துள்ளார்.

பிரபாகரன் என்ற பெயருடைய காவலரை கண்டதற்கே இவ்வளவு மகிழ்ச்சியடைந்துள்ளார் என்றால் பிரபாகர னை எந்தளவிற்கு நேசிக்கின்றார் மரடோனா.

தேடாமல் கிடைத்தால் அதன் அருமை தெரியாது என்பார்கள். அதுபோல தமிழினத்தின் விடுதலையை (சில தமிழர்கள்) விரும்பாத சூழ்நிலையில் பிரபாகரன் அவர்களே தாமாக முன் வந்து விடுதலைக்கான போராட்டத்தை நடத்தினார்

 எம்மவர்களில் எத்தனையோ பேர் பிரபாகரனது விடுதலைப் போராட்டத்தையும் போராட்ட வழி முறைகளையும் கடுமையாக விமர்சித்து வருவதுடன் பங்களிக்காது ஒதுங்கியே இருந்து வருகின்றார்கள். ஆனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் தமிழினத் திற்கு நேரடி சம்பந்தமில்லாத மரடோனா தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது மகிமையினை உணர்ந்துள்ளார் என்பது உலகத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய விடையமாகும்.

Wednesday 13 March 2013


அடக்குமுறை என்பது
அதிகநாள் நீடிப்பதில்லை
அறையபட்ட
சிலுவையிலிருந்து தான்
அற்புதமான கிருத்துவம்
உயிர் பெற்றது
அழிக்கபட்ட முள்ளிவாய்க்காலில்
இருந்து தான்
அன்னை தமிழீழ மண்
உயிர் பெறும்...!!!
அடக்குமுறை என்பது
அதிகநாள் நீடிப்பதில்லை
அறையபட்ட
சிலுவையிலிருந்து தான்
அற்புதமான கிருத்துவம்
உயிர் பெற்றது
அழிக்கபட்ட முள்ளிவாய்க்காலில்
இருந்து தான்
அன்னை தமிழீழ மண்
உயிர் பெறும்...!!!

Gita is the universal Mother.
Gita is the messenger of God.
Gita is the lifeboat to cross the ocean of life.
Gita is the staff and support for spiritual seekers.
Gita is a casket of sacred mantra's.
Gita is a beautiful garden of flowers.
Gita is the royal road to liberation.
*nitya radhika dasi*
Gita is the universal Mother.
Gita is the messenger of God.
Gita is the lifeboat to cross the ocean of life.
Gita is the staff and support for spiritual seekers.
Gita is a casket of sacred mantra's.
Gita is a beautiful garden of flowers.
Gita is the royal road to liberation.
*nitya radhika dasi*

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?


தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?

பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை என்றால் என்ன ??

●தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?

1. தட்டான்

தட்டாதவன்

2. குட்டைப் பையன்

வாமனன்

குழப்பமா இருக்கா..

நம்ம மஹாபலிச் சக்கரவர்த்தி இருக்காரே அதாங்க நம்ம ஓணம் பண்டிகை ஹீரோ , அவர் 99 அசுவமேத யாகம் செஞ்சு முடிச்சிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்யறார். அவரிடம் சென்று யார் தானம் கேட்டாலும் தட்டாமல் தருவதால் அவரே தட்டான் ஆவார் .

அதென்னங்க சட்டை போடுவது?
சட்டை எதுக்காகப் போடறோம்? நெஞ்சை மறைக்கப் போடுகிறோம்..

அப்படின்னா தட்டானுக்கு சட்டை போடுவது என்றால்?

தட்டாமல் தரும் மஹாபலி சக்கரவர்த்தி ஈகை நெஞ்சை மறைப்பது.. அதாவது தானம் தரமுடியாதபடிக்குத் தடுப்பது.

நம்ம சுக்ராச்சாரியார் என்ன செய்யறார்? மஹாபலிச் சக்ரவர்த்தியை தடுக்கிறார். எச்சரிக்கிறார். அதையும் மீறி அவன் தானம் தர நீர் வார்க்க முயற்சிக்கையில் சிறுவண்டாய் மாறி நீர் வராதபடிக்கு அடிக்கிறார்.

அப்ப நம்ம குட்டை பையன் வாமனர் என்ன செய்யறார். ஒரு குச்சியை (கட்டை) எடுத்து தலையில் குத்திவிட சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகிடுது.

அதாங்க

தட்டானுக்குச் சட்டை போட்டால்
குட்டைப் பையன்
கட்டையால் அடிப்பான்.

● பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை

கலியுகத்தில் மக்களைக் காக்க திருவுள்ளம் கொண்ட திருமால், அத்தோடு யசோதைக்குத் தான் கொடுத்த வரத்தைக் காக்கவும், தாமரைச் செல்வியை (பத்மாவதி - தாமரையில் பிறந்தவள்) மணக்கவும் ஸ்ரீநிவாசனாக அவதரித்த போது நடந்தது இது.

குலசேகரன் என்றால் குலத்தின் சிகரமானவனை என்று பொருள். ஸ்ரீ என்றால் செல்வம். செல்வத்தில் உயர்ந்தவன் குபேரன். எனவே ஸ்ரீநிவாசனுக்கு குலசேகரன் குபேரன்.

குபேரன் கிட்ட பதினான்கு இலட்சம் வராகன் கடன் வாங்கித்தானே பத்மாவதியை மணக்கிறார் ஸ்ரீநிவாசன்.

அந்தக்கடனை அடைக்க என்ன வழி? குலசேகரனான குபேரனை வெல்ல என்ன வழி?

அதைத்தான் சொல்கிறது இந்த சின்ன விடு-கதை

பன்றி - வராகப் பெருமாள்
குன்று - வெங்கடாசலம்

ஸ்ரீநிவாசர் தங்க வெங்கடாசல மலையை அளிப்பவர் வராக பெருமாள். அதனால் அவருக்கு நன்றி சொல்லி அவருக்கே முதல் வனக்கம் உரித்தாக வேண்டும் என்றும் சொல்கிறார் ஸ்ரீநிவாஸர்

பின்னர் வெங்கடாத்ரி என்னும் ஏழாவது குன்றின் உச்சியில் நிற்கிறார்.

இப்படி நின்று அருள் புரியும் அவர் இன்று உலகின் மிகவும் பணக்காரக் கடவுளாக இருக்கிறார். குபேரனையே மிஞ்சுகிறார்.

அதான்

பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மேல் ஏறி நின்றால்
வென்றிடலாம் குலசேகரனை..


இனிமேல இந்த மாறி கேள்விலாம் கேப்பீங்களா?
பிரபல நடிகரான ஜாக்கி சானுக்குப் படிப்பறிவு கிடையாது.

பள்ளிக்கூடம் பக்கமே போனதில்லை. ஆங்கிலத்தில் சில
எழுத்துக்களைக் கூட எழுதப் படிக்கத் தெரியாது.

ஒரு பேட்டியில் இதுபற்றி கூறும்போது, “”படத்திற்கான
வசனங்களையும் மற்ற விஷயங்களையும் என் மேனேஜர்
சொல்லுவார். அதை நான் கவனமாக மனதில் பதித்துப்
பொருத்தமாக ஒப்பித்துவிடுவேன்…!” என்கிறார்.


- Sai Ramasamy
பிரபல நடிகரான ஜாக்கி சானுக்குப் படிப்பறிவு கிடையாது.

பள்ளிக்கூடம் பக்கமே போனதில்லை. ஆங்கிலத்தில் சில
எழுத்துக்களைக் கூட எழுதப் படிக்கத் தெரியாது.

ஒரு பேட்டியில் இதுபற்றி கூறும்போது, “”படத்திற்கான
வசனங்களையும் மற்ற விஷயங்களையும் என் மேனேஜர்
சொல்லுவார். அதை நான் கவனமாக மனதில் பதித்துப்
பொருத்தமாக ஒப்பித்துவிடுவேன்…!” என்கிறார்.


- Sai Ramasamy

ராஜபக்சே, சோனியா, மன்மோகன் சிங் ஆகியோருக்கு மலேசியாவில் இறுதிச்சடங்கு.


ராஜபக்சே, சோனியா, மன்மோகன் சிங் ஆகியோருக்கு மலேசியாவில் இறுதிச்சடங்கு.

நேற்று மலேசியாவில் தமிழ் மக்கள் ஒரு வேறுபட்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈழத்துத் தமிழ் உறவுகளைத் திட்டமிட்டுப் படுகொலை செய்த மகிந்த ராஜபக்சே, சோனியா காந்தி, மன்மோகன் சிங், பான்கிமூன் ஆகியவர்களின் உருவப் பொம்மைகளைத் தீயிலிட்டு அவர்கள் இறந்ததாகச் சடங்குகள் செய்து கடற்கரையில் அவர்களின் சாம்பலைக் கடலில் கலந்து இறுதி சடங்கைச் செய்துள்ளனர்.

Admin: H₂O.
ராஜபக்சே, சோனியா, மன்மோகன் சிங் ஆகியோருக்கு மலேசியாவில் இறுதிச்சடங்கு.

நேற்று மலேசியாவில் தமிழ் மக்கள் ஒரு வேறுபட்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈழத்துத் தமிழ் உறவுகளைத் திட்டமிட்டுப் படுகொலை செய்த மகிந்த ராஜபக்சே, சோனியா காந்தி, மன்மோகன் சிங், பான்கிமூன் ஆகியவர்களின் உருவப் பொம்மைகளைத் தீயிலிட்டு அவர்கள் இறந்ததாகச் சடங்குகள் செய்து கடற்கரையில் அவர்களின் சாம்பலைக் கடலில் கலந்து இறுதி சடங்கைச் செய்துள்ளனர்.

Admin: H₂O.

லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை..?
லஞ்சம் வாங்குபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், லஞ்சத்தை ஒழிக்கலாம் என்பது பலரது வாதம். லஞ்சத்துக்கு எந்த நாட்டில் என்ன தண்டனை?
# ஜஸ்லாந்து: இங்கு தண்டனை என்னவோ 2 வருட சிறைச்சாலைதான். அதற்கு முன்பு லஞ்சம் வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும். (ஊழல் குறைவான நாடுகள் வரிசையில் இதற்கு முதலிடம்).
# எகிப்து: இங்கு லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறைதான். அதுவும் உள்ளே கடுமையான வேலைகளைச் செய்யவைத்து பெண்டு நிமிர்த்துவார்கள்.
# அர்ஜெண்டினா: சிறை தண்டனையோடு வேலையும் பறிபோய்விடும். விடுதலையான பிறகும் சாகும் வரை வேறு வேலை தர மாட்டார்கள்.
# செக் குடியரசு: சிறை தண்டனை, வேலை காலி, வீடு மற்றும் பிற சொத்துக்கள் பறிக்கப்படும்.
நைஜர்: இங்கு தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. லஞ்சம் பெற்றது உறுதியானால் அரசியல் மற்றும் குடி உரிமைகள் பறிக்கப்படும்.
# இங்கிலாந்து: சிறை தண்டனையுடன் வாக்களிக்கும் உரிமையும் ரத்து செய்யப்படும்.
# சீனா: கீழ்மட்ட அரசாங்க அலுவலர்களுக்கு சிறை தண்டனை. உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரண தண்டனையும் உண்டு. விஷ ஊசி போட்டு நொடிகளில் சாகடித்து விடுவார்கள். முன்பெல்லாம் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுச் சாகடிப்பார்கள். துப்பாக்கி குண்டுக்கான செலவு உறவினர்களிடம் வசூலிக்கப்படும்.
எல்லாம் சரி இந்தியாவில்..? அரசு ஊழியராக இருந்து லஞ்சம் வாங்கினால் அதிகபட்சம் ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே! உணவு, மது, பொழுதுபோக்கு போன்றவற்றை லஞ்சமாக.... ஸாரி 'கிஃப்ட்டாக' வாங்கினால் அபராதம் மட்டுமே. அரசியல்வாதியாக இருந்து லஞ்சம் வாங்கினால் அப்படியே எம்.எல்.ஏ-வாகி, அமைச்சர் ஆவதுதான் 'தண்டனை'!
தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஹெல்மெட் ஆபத்தை விளைவிக்குமாம் எச்சரிக்கை தகவல்!!

ஹெல்மெட் ஆபத்தை விளைவிக்குமாம் எச்சரிக்கை தகவல்!!

ஹெல்மெட் அணிவதன் காரணமாக பாதகங்கள் எந்த அளவுக்கு இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு அதிகரிக்கும்.

எந்த அளவுக்கு நாளைய வாழ்க்கையின் பெரும் தாக்கங்கள் இதன் காரணமாக உருவாக நேரிடும் என்பதை அக்குபங்சர் எனும் மேன்மையான சித்தாந்தத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். தலைப்பகுதியில் உயிர் இயக்க சக்தி நாளம் நடு மத்தியில் நேர்கோடாக அமைந்துள்ளது.

உயிர் சக்தி நாளத்தை அடுத்து சிறு நீர்ப்பை சக்தி நாளங்கள் அதன் இருபுறமும் அமைந்துள்ளது. இதனையடுத்து உயிர் சக்தி நாளம் அமைந்துள்ள தலை நடு மையக் கோட்டின் இருபுறமும் பித்தப்பை சக்தி நாளங்கள் அமைந்துள்ளன.

இதனையடுத்து நடு மையக் கோட்டின் இரு புறங்களிலும் தேக வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி நாளங்கள் அமைந்துள்ளன. இவையனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கக் கூடியது. தலைப்பகுதி, முதலில் தலையின் நடு மையக்கோட்டில் அமைந்துள்ள உயிர் சக்தி நாளத்திலிருந்து தூரமாக உள்ளது.

ஹெல்மெட் அணியும்பொழுது அதனுடைய கீழ் ஓரப் பகுதி இந்த நாளங்களை அழுத்திப் பிடிக்கிறது என்பதை நீங்கள் பார்க்க முடியும். சாதாரணமாக சக்தி நாளங்கள் அழுத்தப்படக் கூடாது. அவ்வாறு அழுத்தப்படுமானால் அதனுடைய விளைவுகளாக நோய்கள் தோன்றும்.

இந்த நோய்கள் படிப்படியாக வலிகளாக கழுத்திலும், பிடரிகளிலும் ஏற்படும். முழங்கை வலி, தோள்பட்டை வலி, மணிகட்டு வலிகள் இன்னும் விரல் மூட்டுகளில் வலிகள் போன்றவற்றைத் தோற்றுவிக்கும்.

காதைச் சுற்றி இந்த சக்தி நாளம் பரவியிருப்பதைப் பாருங்கள். ஹெல்மெட் அணிவதன் காரணமாக பிற்காலத்தில் காதுகளில் மந்தம் ஏற்படலாம். இன்னும் காதுகளில் வலிகளும் அடிக்கடி சீழ் பிடித்தலும் உருவாகும்.

கண்களின் இருபுறமும் வெளிப்புறங்களில் நெற்றிப் பொட்டுக்களில் தாங்க முடியாத வலி தோன்றினால் அது இந்த சக்தி நாளத்தில் ஏற்பட்டுள்ள பாதகங்களின் காரணமாகவே ஆகும்.
ஹெல்மெட் மற்றும் கண்ணாடிகளை அணிவது இந்த சக்தி நாளங்களை பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். சிறு பிள்ளைகளுக்கு கண்ணாடிகளை அணிவிக்கும் பொழுது காதுகளைச் சுற்றி அமையும்.

அதனுடைய ஃபிரேம் நிச்சயமாக இவர்களுடைய காதுகளை பாதிக்கும். அடிக்கடி காதுகளில் சீழ் பிடிக்கும். இதனை மற்ற மருத்துவத்தால் ஒரு போதும் குணப்படுத்த முடியாது.
எத்தகைய ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொடுத்தாலும் குணமாகாது.

குணமாக இந்தப் புள்ளிகளுக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் பாதுகாப்பீர்களானால் நாளை வரக்கூடிய மணிக்கட்டு வலிகள், விரல் மூட்டுகளின் வலிகள், முழங்கை தோள் பட்டை வலிகள், பிடரி மற்றும் காது, நெற்றிப் பொட்டு வலிகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

அடுத்து பித்தப்பை சக்தி நாளம் தலையின் பக்கவாட்டு முழுவதும் இந்த சக்தி நாளம் பரவியிருக்கிறது. தலையின் இருபுறமும் இது அமைந்திருக்கிறது. ஹெல்மெட் அணியும்பொழுது இந்த சக்தி நாளங்களே பெரும்பாலும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.

இதன் விளைவு வெயில் காலங்களில் ஏற்படும் மயக்கம், தலைவலி, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படுகிறது. பலருக்கு சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு இறப்போரும் இருக்கின்றனர். ஹெல்மெட் அணிவதன் காரணமாக வெயிலின் உச்சக்கட்டத்தில் வாகனங்கள் ஓட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்து ஏற்பட நிச்சயமாக வாய்ப்பு உண்டு.

ஹெல்மெட் அணிவதன் காரணமாக மயக்கம், வாந்தியுணர்வு ஏற்பட்டால் இது மட்டுமல்ல, ஹெல்மெட் கடுமையான கோடை காலங்களில் அணிந்ததன் காரணமாக அதன் விளைவுகள் ஹெல்மெட் அணியாததன் போதிலும் வெயிலில் செல்லும்போது சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு விடலாம்.

அடுத்து சிறு நீர்ப்பை சக்தி நாளம் அமையப் பெற்ற தலைப்பகுதியைப் பாருங்கள். ஹெல்மெட் அணிவதன் காரணமாக யாருக்கு சிறுநீர்ப்பை பலவீனமாக இருக்கிறதோ அவர்கள் அதை அணிய நேரிட்டால் இதன் காரணமாக இந்த சக்தி நாளங்கள் அழுத்தத்திற்கு உட்பட்டு விட்டால், கண்களிலிருந்து தலை முழுதும் வலி ஏற்பட ஆரம்பிக்கும். கண்களின் புருவங்களின் மத்தியில் கடுமையான உளைச்சல் ஏற்படும்.

தலையை ஆட்டினால் நடு மையக் கோட்டிற்கு இருபுறமும் தலையில் நீர் கோர்த்துக் கொண்டது போன்று பாரம் ஏற்படும். கழுத்தின் பின் பகுதியின் மையத்தில் ஏற்படும் வலிகள், குதிகால் வலி போன்றவை ஹெல்மெட் அணிவதன் காரணமாக எந்த நேரத்திலும் தோன்றக்கூடிய நோய்களாகும்.

இவையனைத்தும் கோடை காலங்களில் ஹெல்மெட் அணிவதன் காரணமாக உடல் நிலையில் ஏற்படும் மோசமான விளைவுகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கோடை காலத்திலும் மற்ற நேரங்களிலும் ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டியவர்கள் அவர்களுக்கு ஏற்படும் மேலே கண்ட அனைத்து நோய்களிலிருந்து அக்குபங்சர் சிகிச்சையின் மூலம் மேற்படி நோய்கள் வராமலும், ஏற்கனவே அவதிப்படுபவர்களையும் குணப்படுத்த முடியும்.

இரத்த அழுத்த மாத்திரைகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளை அக்குபங்சர் மூலம் குணப்படுத்தலாம். எப்போது இரத்த அழுத்த மாத்திரைகள் ஒரு நோயாளி சாப்பிட ஆரம்பிக்கிறாரோ அப்போது தொடங்குவது தான் சிறு நீரகங்களின் அழிவு.


நுரையீரலும், சிறு நீரகங்களும் பாதிப்படைய ஆரம்பிக்கும்போது தூக்கமின்மை ஏற்பட ஆரம்பிக்கிறது. காரணம் தெரியாத பயமும் தூக்கத்தை கெடுக்கும். இரண்டு, மூன்று மணிக்கு மேல் பின்னிரவில் தூக்கம் கலைந்து விடுமானால் அது நுரையீரல் பாதிப்பை வெளிப்படுத்துகிறது. ஆண்களையும், பெண்களையும் மலடுகளாக்குவதும் இந்த இரத்த அழுத்த மாத்திரைகள்தாம்.

ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி, இரத்த அழுத்த மாத்திரையை உட்கொள்ள ஆரம்பித்த சில வருடங்களில் உடலுறவில் நாட்டமழிப்பார்கள். ஈடுபட நினைத்தாலும் அவர்கள் உறுப்புகள் ஒத்துழைக்காது.

சிலருக்கு வயிற்றின் மேல் பகுதிகளில், சிலருக்கு அடிவயிற்றில், சிலருக்கு இடுப்பு மடிப்புகளில், சிலருக்கு இடுப்பு மடிப்புக்கு கீழே தொடைப்பகுதியில், சிலருக்கு முதுகு அல்லது தோள் பட்டைகளில் இன்னும் சிலருக்கு கழுத்தின் முன்புறமோ, பின்புறமோ சதைகள் பருமனாகும்.

கழுத்தின் முன்புறம் சதை பருமனாகுதல் சிறு நீரகங்கள் சக்தியிழந்து வருவதை உணர்த்துகிறது. கழுத்தின் பின்புறம் போடும் சதை சிறுநீர்ப்பையின் சக்தி குறைவை வெளிப்படுத்துகிறது. பெண்களுக்கு பொதுவாக சதை போட ஆரம்பிக்கும்.

மார்பகங்களில் அதிகனமாக தோற்றமளித்தால் அது பெண்ணோ, ஆணோ வயிற்றுடன் சம்மந்தப்பட்டது. வயிற்றின் வேலை செய்யும் திறன் குறையும் போது அதிகப் பசி எடுப்பதோடு மட்டுமில்லாமல் மார்பகங்களில் ஊளைச் சதை போடும்.


மார்பகங்களுக்குப் பக்கவாட்டில் அக்குகளிலும் அக்குள் மடிப்புகளிலும் சதை விழுமானால் அது சிறு குடல், இருதயம் ஆகிய இவ்விரு உறுப்புகளின் பலவீனத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. இது அவ்வப்போது குணப்படுத்தப்படாமல் போகும்போது தான் நாளடைவில் சிறு குடல் நோயின் காரணமாக ஏற்படும் அஜீரணக் கோளாறை காலமெல்லாம் அனுபவிக்க நேரிடுகிறது.

அது மட்டுமல்ல இருதயக் கோளாறுகளும் படபடப்பு, தூக்கமின்மை, மயக்கம், தலைச்சுற்றல் ஆரம்பம் பெற வழி ஏற்படுகிறது.

மேலே கண்ட அனைத்து நோய்களையும் அக்குபங்சர் சிகிச்சையின் மூலம் குணமாக்குவதுடன் தொடர்ந்து இரத்த அழுத்த மாத்திரைகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

நன்றி - டாக்டர் கலா தியகாராஜன்

உலகின் மிக ஆபத்தான இடம்!!


முன்னாள் சோவியத் ஒன்றியம் மறைத்து வைத்த மிக மோசமான ரகசியங்களில் ஒன்று அது. எழுபது வருடங்களில் இரண்டு அணுஉலை விபத்துக்கள்... 23,000 சதுர கிலோமீட்டர்கள் பரப்பிற்கு ப்ளுட்டோனியம் பரவி 1,24,000 மனித உயிர்கள் காலத்திற்கும் முழுவதுமாக பாதிக்கப்பட்டு....

36,00,000 மக்கள்தொகை கொண்ட ரஷியாவின் செல்யாபின்ஸ்க் மாகாணத்திற்கு வாருங்கள். இந்த செல்யாபின்ஸ்க்கிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் 1940களின் இறுதியில் மாயக் என்ற அணுஆயுத கட்டுமானம் நிறுவப்பட்டது. 1990 வரை இந்த அணு ஆயுத கட்டமைப்பு இந்தப் பகுதியை அணு மற்றும் ரசாயன கழிவுகளால் தொடர்ச்சியாக கன்னா பின்னாவென்று சீரழித்தது. ஆனால் அதுவல்ல விஷயம்.

1957இல் இந்த அணுஆயுத தொழிற்சாலையின் குளிரூட்டும் பகுதி செயலிழந்தது. இதனால், கதிரியக்க மூலப்பொருள் சேமிப்பு காலன் வெடித்து மிகமோசமான அணு விபத்து சம்பவித்தது. அந்த அணுஆயுத மையத்தை சுற்றி 23000 சதுர கிலோமீட்டர பரப்பளவிற்கு கதிர்வீச்சு பரவியது. சிறிது நேரத்திலேயே உருவான கதிரியக்க மேகம் செல்யாபின்ஸ்க், ச்வேர்ட்லோவ்ச்க் மற்றும் டியுமென் மாகாணங்களுக்கு மேல் பரவி பொழிந்தது.

நதிக்கரையில் வாழ்ந்து வந்த 1,24,000 அப்பாவி மக்கள் கடுமையான அணு கதிர்வீச்சு பாதிப்பிற்கு உள்ளானார்கள். செர்னோபில் அணு விபத்து வெளியிட்டதைவிட கிட்டத்தட்ட இருமடங்கு அணுக் கதிர்வீச்சை இந்த அணுகதிர்வீச்சு விபத்து வெளியிட்டது.

பிறகு.... அந்த இடம் உச்சபட்ச பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு சுமார் 10,700 மக்கள் சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்டனர்.

இந்த அணுகதிர் விபத்திற்கு பிறகு உடனடியாக வியாதிகளும், மரணங்களும் அதிகரிக்கத்துவங்கின. பிறப்பு குறைபாடுகள், ஜீன் பாதிப்புகள், ஆண் பெண் மலட்டுத்தன்மை மற்றும் கேன்சர் எண்ணிக்கைகள் எகிறின. 1950 லிருந்து வெண்குஷ்டம் 41 சதவிகிதம் அதிகரித்தது. அந்த பகுதியின் நூறுகோடி காலன்கள் அளவுள்ள நிலத்தடி நீர் அனுக்கழிவுகளால் மாசுபடுத்தப்பட்டுளன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பகுதியின் மக்கள் தொகையில் குழந்தைபேற்றுக்கு தகுதியான மக்களில் சரி பாதி மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1990இல் இந்த பகுதியை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு மனிதனை ஒரே மணி நேரத்தில் கொன்று விடக்கூடிய அளவிற்கு ஆண்டு கதிர்வீச்சு நிரம்பியுள்ளதாக தெரிவித்தனர்.

இன்று...:

இந்தப் பகுதியில் உள்ள ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டன.

அங்கு நீங்கள் ஒரு மணிநேரம் விசிட் செய்தால் இரண்டு நாட்கள் தொடர் தலைவலியால் அவதிப்பட நேரிடும். அந்தப் பகுதியில் காணப்படும் மீன்களில் 17,000 பெகியுரல் என்ற அளவிற்கும் காய்கனிகளில் 8,000 பெகியுரல் என்ற அளவிலும் அதிர்ச்சி தரத்தக்க அளவில் அதிக கதிர்வீச்சு காணப்படுவதாக 1996 ல் ஒரு ஜெர்மன் ஆய்வு தெரிவிக்கிறது.

இவ்வித விஷத்தன்மைகளிளிருந்து இந்தப் பகுதியை தூய்மை படுத்தும் சர்வதேச முயற்ச்சிகள் துவங்கி விட்டன.

அணு உலைகள் மனித உயிருக்கு உலை வைக்கும் என்பதில் ஐய்யம் ஏதும் இல்லை என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துகாட்டு.

நன்றி- கனிமொழி.
உலகின் மிக ஆபத்தான இடம்!!

முன்னாள் சோவியத் ஒன்றியம் மறைத்து வைத்த  மிக மோசமான ரகசியங்களில் ஒன்று அது. எழுபது வருடங்களில் இரண்டு அணுஉலை விபத்துக்கள்... 23,000 சதுர கிலோமீட்டர்கள் பரப்பிற்கு ப்ளுட்டோனியம் பரவி 1,24,000 மனித உயிர்கள் காலத்திற்கும் முழுவதுமாக பாதிக்கப்பட்டு.... 

36,00,000 மக்கள்தொகை கொண்ட ரஷியாவின் செல்யாபின்ஸ்க் மாகாணத்திற்கு வாருங்கள். இந்த செல்யாபின்ஸ்க்கிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் 1940களின் இறுதியில் மாயக் என்ற அணுஆயுத கட்டுமானம் நிறுவப்பட்டது. 1990 வரை இந்த அணு ஆயுத கட்டமைப்பு இந்தப் பகுதியை அணு மற்றும் ரசாயன கழிவுகளால் தொடர்ச்சியாக கன்னா பின்னாவென்று சீரழித்தது. ஆனால் அதுவல்ல விஷயம்.

1957இல் இந்த அணுஆயுத தொழிற்சாலையின் குளிரூட்டும் பகுதி செயலிழந்தது. இதனால், கதிரியக்க மூலப்பொருள் சேமிப்பு காலன் வெடித்து மிகமோசமான அணு விபத்து சம்பவித்தது. அந்த அணுஆயுத மையத்தை சுற்றி 23000 சதுர கிலோமீட்டர பரப்பளவிற்கு கதிர்வீச்சு பரவியது. சிறிது நேரத்திலேயே உருவான கதிரியக்க மேகம் செல்யாபின்ஸ்க், ச்வேர்ட்லோவ்ச்க் மற்றும் டியுமென் மாகாணங்களுக்கு மேல் பரவி பொழிந்தது.

நதிக்கரையில் வாழ்ந்து வந்த 1,24,000 அப்பாவி மக்கள் கடுமையான அணு கதிர்வீச்சு  பாதிப்பிற்கு உள்ளானார்கள். செர்னோபில் அணு விபத்து வெளியிட்டதைவிட கிட்டத்தட்ட இருமடங்கு அணுக் கதிர்வீச்சை இந்த அணுகதிர்வீச்சு விபத்து வெளியிட்டது.

பிறகு.... அந்த இடம் உச்சபட்ச பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு சுமார் 10,700 மக்கள் சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்டனர்.

இந்த அணுகதிர் விபத்திற்கு பிறகு உடனடியாக வியாதிகளும், மரணங்களும் அதிகரிக்கத்துவங்கின. பிறப்பு குறைபாடுகள், ஜீன் பாதிப்புகள், ஆண் பெண் மலட்டுத்தன்மை மற்றும் கேன்சர் எண்ணிக்கைகள் எகிறின. 1950 லிருந்து வெண்குஷ்டம் 41 சதவிகிதம் அதிகரித்தது. அந்த பகுதியின் நூறுகோடி காலன்கள் அளவுள்ள நிலத்தடி நீர் அனுக்கழிவுகளால் மாசுபடுத்தப்பட்டுளன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பகுதியின் மக்கள் தொகையில் குழந்தைபேற்றுக்கு தகுதியான மக்களில் சரி பாதி மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1990இல் இந்த பகுதியை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு மனிதனை ஒரே மணி நேரத்தில் கொன்று விடக்கூடிய அளவிற்கு ஆண்டு கதிர்வீச்சு நிரம்பியுள்ளதாக தெரிவித்தனர்.

இன்று...:

இந்தப் பகுதியில் உள்ள ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டன.

அங்கு நீங்கள் ஒரு மணிநேரம் விசிட் செய்தால் இரண்டு நாட்கள் தொடர் தலைவலியால் அவதிப்பட நேரிடும். அந்தப் பகுதியில் காணப்படும் மீன்களில் 17,000 பெகியுரல் என்ற அளவிற்கும் காய்கனிகளில் 8,000 பெகியுரல் என்ற அளவிலும்  அதிர்ச்சி தரத்தக்க அளவில் அதிக கதிர்வீச்சு காணப்படுவதாக 1996 ல் ஒரு ஜெர்மன் ஆய்வு தெரிவிக்கிறது.

இவ்வித விஷத்தன்மைகளிளிருந்து இந்தப் பகுதியை தூய்மை படுத்தும் சர்வதேச முயற்ச்சிகள் துவங்கி விட்டன.

அணு உலைகள் மனித உயிருக்கு உலை வைக்கும் என்பதில் ஐய்யம் ஏதும் இல்லை என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துகாட்டு.

நன்றி- கனிமொழி.

காங்கரசே இந்த வினாகளுக்கு பதில் சொல்


புலிகளை குறை சொல்லும் கேவலமான காங்கரசே இந்த வினாகளுக்கு பதில் சொல்.
இனிமேல் சோனியாவின் பாவாடை காணமல் போனால் கூட புலிகளை தான் சொல்வார்கள் போலும்...
1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்?
2. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?
3. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?
4. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?
5. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?
6. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?
7. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் தோட்டம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?
8. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?
9. யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?
10. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் த. பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?
11. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?
12. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார்.
13. உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?
14. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?
15. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், ‘ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். ‘அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்?’ என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?
16. மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு.
17. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?
18. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?
19. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப் படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். ‘வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.
20. காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?
21. சிவராசன், தனு, சுபா ஆகியோர் ஒரு அந்நிய சக்தியின் தூண்டுதலால் ஏன் இந்தக் கொலையை செய்திருக்கக் கூடாது? அந்த மூவரும் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதால் மட்டுமே அவர்களைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி விசாரணையை முடித்துவிட்டார்களா?
22. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?
23. பிரபாகனும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத் துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?
24. ‘விசேஷ’ இலட்சியமுள்ள அரசியல்வாதிகள், ஏன் அவரது காங்கிரஸ் தோழர்களே கூட தங்கள் வளர்ச்சிக்கு ராஜீவ் தடையாக இருக்கிறார் என்பதால் கூலிப்படையினரை ஏவிவிட்டு ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?
25. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?
26. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது?
27. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?
28. புலிகளின் ‘இந்துத்துவா’ அபிமானம், இலங்கைத் தமிழர்களுக்கு உண்டான இந்து வெறி இரண்டையும் பயன்படுத்தி ஆர். எஸ்.எஸ். பிஜேபி இலங்கைத் தமிழர்கள் மூலமாக ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது? அவர்கள் ஆட்சியைப் பிடிக்க தடையாக இருக்கும் ஒரே தலைவர் ராஜீவ் தான். மகாத்மாவைக் கொன்றவர்கள் ஏன் ராஜீவைக் கொன்றிருக்கக்கூடாது?
29. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீபெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தினார்? தன்னை அறியாமல் சிக்கி ராஜீவ் மரணப்படுக்கையில் விழக் காரணமாகி விட்டாரா?
30. யார் இந்த பொட்டு அம்மான்? இப்படி ஒரு நபர் இருக்கிறாரா? அம்மான் ஒரு மூத்த தலைவர். ஒரு போரில் இறந்துவிட்டார். பொட்டு மட்டுமே உள்ளார் என்கிறது எல்.டி.டி.ஈ. வட்டாரம். உயிருடன் இல்லாத ஒரு நபரை எப்படி இரண்டாவது குற்றவாளியாக புலனாய்வுத்துறை முத்திரை குத்தியது?
31. பத்மநாபா கொலை வழக்கையும், இந்த வழக்கையும் ஒப்பிட்டால் பல உண்மைகள் வெளிவருகின்றன. தமிழ்நாடு காவல்துறையின் ‘க்யூ’ பிராஞ்ச், பத்மநாபா வழக்கை விசாரித்தது. விசேஷப் புலனாய்வுத்துறை, ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்தது. இரண்டு விசாரணை அமைப்புகளும் சதி நடந்த இடம் யாழ்ப்பாணம் என்கின்றன. பத்மநாபா வழக்கில் குற்றவாளிகளில் சிவராசன். ராஜீவ் வழக்கில் அவர் முக்கிய குற்றவாளி. அப்படியானால் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகக் கருதப்பட்ட பிரபாகரன் பத்மநாபா வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை? ஆகவே பிரபாகரன் பெயரை நுழைப்பது அரசியல் முடிவே தவிர விசாரணையினால் கிடைத்த தெளிவே அல்ல. கடும் உள்நோக்கத்துடன் வழக்கிற்கு உயிர்கொடுக்க புலனாய்வுத்துறை செய்த முயற்சி இது.
32. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி. ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? ‘ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை’ என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்?
33. இந்தியா மற்றும் தமிழகத்தில் தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்தார்?
34. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?
35. ஸ்ரீபெம்புதூருக்கு செல்லும் முன் இரண்டு தெருமுனைக் கூட்டங்களில் பேசினார் ராஜீவ். அந்தக் கூட்டங்களில் மேடை வரை உடன் வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் ஏன் தொலை தூரம் தள்ளிப்போனார்?
36. அப்பாவிப் பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ராஜீவுடன் உயிரிழந்தார்கள். ஆனால் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் இலேசான காயம் கூட இல்லையே. அது ஏன்?
37. தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்பட வில்லை?
38. பிரபாகரன், சிவராசன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய படத்தை வைத்துக் கொண்டு பிரபாகரனுக்கு இதில் தொடர்பு உண்டு என்று எப்படிச் சொல்லலாம்?
39. தனு, சுபா, சிவராசன் மூவரும் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, மேற்கத்திய, ஐரோப்பா, இந்தியா கூலிப்படையின் கையாட்களாக ஏன் ஆகியிருக்கக்கூடாது?
40. மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?
41. சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி மூவருக்கும் இந்த வழக்கில் ஏதாவது தொடர்பு உண்டா என்கிற கோணத்தில் விசாரணை நடந்ததா?
42. புலிகள் இந்தக் கொலையை செய்ததின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த ஆதாயம் என்ன? அமெரிக்கா போன்ற மிகப் பெரிய வல்லரசுகள், சி.ஐ.ஏ. மூலமாக, ஏராளமான ஆயுத உதவிகளும் செய்து இந்தக் காரியத்தை செய்ய வைத்தார்களா?
43. யாரோ சிலரைப் பிடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.யும், விசேஷ புலனாய்வுத் துறையும் எதற்கு?

மேதகு பிரபாகரன்


மேதகு பிரபாகரன்: என்ட ரெண்டு பிள்ளையளையும் தமிழீழ மண்ணுக்காய் கொடுத்திட் டேனப்பா!!!!
விடுதலைப் போராட்டம் பாதுகாக் கப்படவேண்டுமென்றால் தலைவர் களத்தைவிட்டு அகலவேண்டுமென்று தளபதியர்கள் முடிவெடுத்தபோது அதை ஏற்க மறுத்தார் பிரபாகரன். என்னை நம்பி வந்த மக்களையும் போராளிகளையும் விட்டுவிட்டு நகரமாட்டேன் என்பதில் பிடிவாதமாயிருந்திருக்கிறார்.
ஆனால் அகன்றே தீரவேண்டுமென தளபதியர்கள் வற்புறுத்தியபோது சார்லஸ் காட்டுக்குள் நிற்கிறான்.
“”தன்னையும் மகனையும் காப் பாற்றிக்கொண்டு “போராளிகளையும் மக்க ளையும் அழிவுக்குக் கொடுத்தான்’ என்ற வரலாற்றுப் பழி என்னைச் சேரவிடமாட்டேன்” என்றிருக்கிறார். “”அப்படியானால் சார்லஸை களத்திற்கு அழைத்து வருகிறோம்” என்று தளபதியர் உறுதி கூறிய பின்னரே முல்லைத்தீவை விட்டு அகலும் முடிவினை பரிசீலிப்பதற்கு ஒத்துக்கொண்டிருக் கிறார் பிரபாகரன். எளிய மொழியில் சொல்வதானால் விடுதலைப் போராட்டத்தை பாதுகாக்க வேண்டி தந்தையிடமே அவரது அன்பு மகனின் உயிரை தளபதியர் விலைபேசினார்கள் என்பதே உண்மை.
தமிழுலகே, இப்படியோர் அப்பழுக்கில்லா உன்னதம் உலகில் வேறெந்த விடுதலை இயக்கமும் கண்டிருக்க வில்லையென உரத்துச் சொல், மதர்ப்புடன் பெருமிதம் கொள்.
மே 18. அதிகாலை 2 மணிக்கு முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதி யுத்தம் தொடங்கியது. சிறப்பு படையணியில் சார்லஸும், மாலதி படையணியில் துவாரகாவும் நின்று களமாடினார்கள்.
காலை 10 மணியளவில் சார்லஸும் 10.40 மணியளவில் துவாரகாவும் வீரமரணம் தழுவினர். 12 மணியளவில் செயற்கைக்கோள் தொலைபேசியில் தனக்கு நம்பிக்கையான ஒருவரிடம் பேசிய பிரபாகரன், “”என்ட ரெண்டு பிள்ளையளையும் தமிழீழ மண்ணுக்காய் கொடுத்திட் டேனப்பா…” என்றிருக்கிறார்.
விடுதலைக்காய் வீட்டுக்கொரு பிள்ளையைத் தாருங்கள் என்று வேண்டிய தலைவன், தனது பிள்ளைகள் இரண்டை தியாக வேள்விக்குத் தந்த வரலாறு புனிதமாய், காவியமாய், வேதமாய், எமது வரலாற்றின் முடிவிலா காலங்களுக்கும் உயிர்த்துடிப்புடனும் தலைமுறைகள் மெய்சிலிர்க்கும் ஆன்மீகப் பரவசமாயும் தொடரும்.

மனித மூளையும் அதன் செயல்திறனும்..!


மனித மூளையும் அதன் செயல்திறனும்..!
1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும்.
2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.
3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான் முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றன மீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.
4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமே நம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது.
5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது.
6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்.
7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும்
8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும்.
9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளை அறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள்.
10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). பட்டர் வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம்.
11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு.
12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபக படுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளை செல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும்
13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்கமுடியும்.
14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot) வாய்ப்புகள் அதிகம்.