Sunday 29 July 2012

சேகுவேரா


சேகுவேரா-உன் கரங்கள்.......... 

ஒரு எழுதுகோலில் 
ஏழையின் கண்ணீரை கொட்டி, 
எழுத கொடுத்தார்கள்... 

ஒரு பணக்காரன் கரங்கள் 
அதை கொண்டு 
நகைச்சுவைத் துணுக்கெழுதி ரசித்தது.... 

ஒரு அரசியல்வாதி கரங்கள் 
அதை கொண்டு 
போலியாய் சில வாக்குறுதிகளை குறிப்பெடுத்துக்கொண்டது..... 

ஒரு சர்வாதிகாரியின் கரங்கள் 
அதை கொண்டு 
தனக்கு தானே 
உயில் சாசனம் எழுதி கொண்டது.... 

ஒரு அரசவை கவிஞனின் கரங்கள் 
அதை கொண்டு 
காதல் கவியொன்று படைத்தது...... 

ஒரு மதவாதியின் கரங்கள் 
அதை கொண்டு 
தனக்கென்று ஒரு மதநூல் எழுத முனைந்தது..... 

ஆனால், 
ஒரே ஒரு கரங்கள் 
மட்டும் 
அதை கொண்டு புரட்சியை எழுதியது...... 

அந்த கரங்கள், 
"சேகு வேரா" written by

                           (late)jessie

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.