Sunday 29 July 2012


கைகோர்த்து சென்றோம் 
தோள்சாய்ந்து வாழ்ந்தோம் 
ஒரே நிழலில் நின்றோம் ! 

உன்னால் கவலைகளை மறந்தேன் 
மகிழ்ச்சியில் மிதந்தேன் 
வாழ்க்கையில் யாவும் அடைந்தேன் ! 
உன்னால் என்வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்தது 
இருந்தும் 
இயற்க்கை -ஏன் 
உன்னை பிரித்து சென்றது 

நண்பனே.. 
உன்னை என்கரங்களில் 
வாழ்க்கை முழுவதும் தாங்கி நிற்பேன் ! 
ஆனால் 
உன்னை என்தோளில் சுமந்த ஐந்துநிமிடம் 
என் ஐம்புலன்களும் உடைந்து உருகிபோயின ! 

ஆண்டவன் என்கண்ணை கேட்டு 
இருந்தால் கொடுத்து இருப்பேன் -ஏன் 
உயிரை பறித்திருந்தால் கூட சந்தோசபட்டிருப்பேன் 
ஆண்டவனுக்கு  உன்  உயிர்தான் வேண்டுமென்று 

பறித்துகொண்டான்! 

நீ மீண்டும் 
மறுஜென்மம் எடுத்தால் 
என்நண்பனாகஇருக்கவேண்டும் என்று 

உன்னை பறித்துகொண்ட 
இரக்கமற்ற ஆண்டவனிடமே 
வேண்டிகொள்கிறேன் !

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.