Sunday 29 July 2012

கோபிநாத் !


கோபிநாத் ! 

காயங்கள் கண்டபோதிலும் 
கனவுகளை நோக்கி ஓடியவன் 
ஆடைகள் விற்றபோதும் ஆசைகளை விட்டுகொடுக்காதவர் 
தன்னம்பிக்கையால் தடைகளை கடந்தார் 
உன்எண்ணங்கள் உனக்கு வலிமை 
பேச்சே உந்தன் திறமை ! 

சிந்தனையால் சிலிர்க்க வைத்தார் 
அவர் பேச்சால் மெய்மறக்க வைத்தார் 
நீ பேசுவதால் 
சமுதாயத்தில் அவிழாத முடிச்சுகளும் 
அவிழும் ! 

நீயா நானா என பேசுவதிலும் 
நியாயங்களை நிலைநாட்டுவதிலும் 
வல்லமை படைத்தவன் ! 

உன்பேச்சில் விழித்தவர்களும் உண்டு 
மயங்கியவர்களும் உண்டு ! 


நீ சாதிக்க பிறந்தவன் 
எதையும் விவாதிக்க சிறந்தவன் 
உண்மையை உரைப்பதில் வல்லவன் ! 

நீ விரும்பிய மேலாண்மையை விட 
சிறந்தது உனது புத்திகூர்மை... 

அன்று சென்னையில் 
உன் படிப்புசான்றிதழை அடகுவைத்தாய் 
இன்று 
உன்பேச்சில் உலகமே 
அடங்கிப்போனது !

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.