Sunday 29 July 2012


தோழியின் நினைவில் சில நாட்கள் 

பிரிவு நட்புக்கில்லை என்று கவிதை பாடி 

தமிழ் வானில் பறந்த போது 

யார் கண் பட்டு சென்றதோ 

நம் நட்புக்கு முடிவு ஆனதோ 

மூட நம்பிக்கை எனக்கில்லை 

இருந்தும் நம்பாமல் இருக்க முடியவில்லை 

உனக்காய் கவிதை சொல்லி 

உன் உருவில் தாய் மடி கண்டு 

உன் மூச்சு காற்றை தாலாட்டாய் சுவாசித்து 

நிறைய கதைகள் பேசி 

வெறும் கனவோ என சிந்திக்க வைக்கும் 

வைர நிமிடங்கள் அவை 

திரும்ப வருமென்றால் தொலைக்க 

காத்திருக்கிறேன் அதில் தொலைய 

காத்திருக்கிறேன் வருவாயா அதே 

நட்பின் பார்வையோடு என் தோள் சாய

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.