Monday 8 October 2012

செய்த பாவங்களை செலவில்லாமல் தீர்த்திடும் வழி!


சதுரகிரி மலையின் அருமை பெருமைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அத்தனை சிறப்பான காரண காரியங்கள் அந்த மலையெங்கும் நிறைந்தும், மறைந்துமிருக்கிறது. அப்படியான ஒரு தகவலை இன்றைக்கு பகிர்ந்து கொள்கிறேன்.

வினை,எதிர்வினை என்பது பிரபஞ்சத்தின் ஆதார தத்துவம்.இதன் அடிப்படையில்தான் எல்லாமே இயங்குகிறது. மனிதனும் கூட தான் செய்யும் வினைகளுக்கான எதிர்வினையை எதிர்கொள்க
ிறான்.இந்த வினைப் பயனை முழுமையாய் களைந்து “பிறவாப் பேரின்பநிலை” அடைவதே உயரிய சித்த நிலை எனப் படுகிறது. இந்த உயரிய நிலையினை அடைவது எல்லோருக்கும் சாத்தியமில்லை, குருவருள் கிட்டியவர்களுக்கே சாத்தியமாகும்.

சாமான்யர்கள் இந்த வினைப் பயனை அனுபவித்தே தீர்த்திட வேண்டியிருக்கும், இருப்பினும் பரிகாரங்களின் மூலமாய் இதன் தீவிரத்தில் இருந்து காத்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும் என்கின்றனர். அநேகமாய் எல்லா மதங்களிலும்... 



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.