Friday 17 August 2012

கொட்டாவி

கொட்டாவி என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து மூச்சுக் காற்றை வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே வேளையில் செவிப்பறை விரிவடைவதும், பின்னர் நுரையீரலில் இருந்து பெருமூச்சாக வாய்வழியே காற்றை வெளிவிடுவிடுவது
மான செயலைக் குறிக்கும்.

ஒருவருடன் நாங்கள் உரையாடும் போது அந்த நபர் கொட்டாவி விட்டால் அவர் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்று நினைப்போம்.அவர் எங்களை அலட்சியப்படுத்துகிறார் என்று எங்களுக்குள் எண்ணிக் கொள்வோம்.

ஆனால் உண்மை அதுவல்ல.அவர் எங்கள் பேச்சை உன்னிப்பாக அவதானிக்கிறார் என்பதே அர்த்தம்.எனவே இனி யாராவது கொட்டாவி விட்டால் மகிழ்ச்சியடையுங்கள்.

புதிய ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.