Friday 31 August 2012

தலையெழு வள்ளல்கள்


குமணன் , சகரன் , சகாரன் , செம்பியன் , துந்துமாரி , நளன் , நிருதி ஆகிய எழுவரைத் தலையெழு வள்ளல்கள் எனத் தொகுத்துக் காட்டுவர்.
இந்தத் தொகுப்பு வரலாற்றுக்கு முரணானது.
குமணன் கடையெழு வள்ளல்களின் காலத்துக்குப் பிற்பட்டவன்.
செம்பியன் எனக் குறிப்பிடப்படுபவன் சிபிச் சக்கரவர்த்தி எனப் பேசப்படுபவன்.
தந்துமாறன் என்னும் வள்ளலைச் சங்கவருணர் என்னும் நாகரியர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.
நிடத-நாட்டு நளன் பற்றிய இலக்கியம் உள்ளது.
பிற மூவர் புராணக் கதை மாந்தர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.