Wednesday 13 March 2013

பெண்களும் பழமொழிகளும்:-


தாயை‌ச் ‌சிற‌ந்த கோ‌யிலு‌ம் இ‌ல்லை.
ஒ‌வ்வொரு ஆ‌ணி‌ன் வெ‌ற்‌றி‌க்கு‌ம் ‌பி‌ன்னா‌ல் ஒரு பெ‌ண் இரு‌ப்பா‌ர்.
ஆ‌ண் பு‌த்‌தி மு‌ன் பு‌த்‌தி, பெ‌ண் பு‌த்‌தி ‌பி‌ன் பு‌த்‌தி. (‌பி‌ன்னா‌ல் நட‌க்க‌ப்போவதையு‌ம் ‌சி‌ந்‌தி‌த்து‌ச் செய‌ல்படுவா‌‌ள்.)
அ‌ரிது அ‌ரிது பெ‌ண்ணா‌‌ய் ‌பிற‌ப்பது அ‌ரிது - ஒ‌ளவையா‌ர்
ஒரு நல்ல தாய், நூறு ஆசிரியர்களுக்கு சமம் - ஹெர்பட்
பெண்ணும், ஆணும் ஒரு கத்திரிக்கோலின் இரண்டு அலகுகள் போன்றவர்கள் - பெஞ்சமின் பிராங்ளின்
பெண் மனம் அறிவு பெறுவதைப் பொறுத்தே மனித சமுதாய‌ம் அறிவும் வளர்ச்சியு‌ம் பெறுகிறது - ஹெரிடன்
அழகான பெண் கண்களுக்கு விருந்து அளிக்கிறாள். குணமுள்ள பெண் இதயத்துக்கு இதம் அளிக்கிறாள் - நெப்போலியன்
வாஞ்சையின் சரித்திரம்தான் பெண்ணின் வாழ்க்கை - இர்விங்
விண்ணுல‌கில் கவிதை மலர்கள் விண்மீன்கள். மண்ணுலகில் கவிதை மலர்கள் பெண்கள் - ஹார்கிரேவ்
ஆண்களின் வாதம் சாதிக்காததை பெண்களின் பார்வை சாதித்துவிடும் - ஹெவில்.
அன்னையை எவரோடும் ஒப்பிடக் கூடாது, அவள் ஈடற்றவள்.
தந்தையின் அன்பு கல்லறை வரை, தாயின் அன்பு உலகுள்ள வரை.
பெ‌ண்‌ணி‌ன் அழகற்ற மனதைவிட அழகற்ற முகமே சிறந்தது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.